மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 December, 2021 2:56 PM IST
Postponement of housing electricity subsidy scheme

நடந்து வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருந்த புதிய மின் கட்டண வரைவை, மத்திய மின் அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த வரைவோலையில், மின்வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்குப் பதிலாக, நேரடியாக வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் இயக்கத்தின் அழுத்தத்தால் மத்திய அரசு மற்றொரு பெரிய சீர்திருத்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது. புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற்று, வங்கிகளை தனியார் மயமாக்கும் விவகாரத்தில் இருந்து விலகிய நிலையில், மின் மானியத்தை நேரடியாக வாடிக்கையாளர்களின் கணக்கில் செலுத்தும் திட்டத்தை தற்போது தள்ளி வைத்துள்ளது.

இதற்காக, நடந்து வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருந்த புதிய மின் கட்டண வரைவை, மத்திய மின் அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த வரைவோலையில், மின்வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்குப் பதிலாக, நேரடியாக வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக நின்ற விவசாயிகள்(Farmers who stood against the government)

எல்பிஜி(LPG) வாடிக்கையாளர்களின் மானியம்(Subsidy) நேரடியாக அவர்களின் கணக்கில் செல்வது போல், மின்சார வாடிக்கையாளர்களுக்கும் இதேபோன்ற வழிமுறையை உருவாக்க அரசாங்கம் விரும்பியது, ஆனால் ஒரு பெரிய எண்ணிக்கையில் விவசாயிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால், இந்த மசோதாவை முன்னெடுப்பதில் இருந்து அரசு பின்வாங்கியுள்ளது.

உண்மையில், தேசிய அளவில் மின்சாரத்தின் சராசரி விலை யூனிட்டுக்கு ரூ.6 ஆக இருந்தது. ஆனால் இந்த விலையில் வீட்டு வாடிக்கையாளர்களுக்கு 27 சதவீத மானியமும், விவசாயத்திற்கு 87 சதவீத மானியமும் அரசால் வழங்கப்படுகிறது.

வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் மானியத்தின் சுமை(Burden of commercial and industrial consumer subsidy)

வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் இந்த மானியத்தின் பெரும் சுமையை சுமக்கிறார்கள். வணிக நுகர்வோர் செலவை விட 52% அதிகமாகவும், தொழில்துறைக்கு 23% அதிகமாகவும் செலுத்த வேண்டும்.

மின்சாரம் தொடர்பான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த சீர்திருத்தம் விவசாயிகளின் பாக்கெட்டுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எல்பிஜிக்கான மானியத்தை அரசு படிப்படியாக நிறுத்தும் விதம் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

அதேபோல் மின் மானியத்தையும் ரத்து செய்யலாம். அதனால்தான் விவசாயிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அழுத்தத்தின் கீழ், அரசாங்கம் இந்த சீர்திருத்தத்தில் இருந்து விலகியது.

மேலும் படிக்க:

Pm Kisan: 10ஆம் தவணையின் ரூ.4000 எப்படி சரிபார்ப்பது?

இந்தியாவில் மின்சார டிராக்டர் விரைவில் அறிமுகம்

English Summary: Central Government: Postponement of housing electricity subsidy scheme!
Published on: 18 December 2021, 02:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now