மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 October, 2020 12:07 PM IST
Credit : Times of india

சிறு வியாபாரிகளுக்கு மானியமோ (Subsidy) அல்லது கடன் தொகையோ கிடைப்பது என்றுமே எட்டாக்கனி தான். அதுவும் சாலையோர வியாபாரிகளுக்கு நிச்சயம் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, எளிய சிறு வியாபாரிகளுக்கும் கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துளள்ளார் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi).

சிறு வியாபாரிகளுக்கு கடன்:

சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை (Credit assistance program) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தெரு தெருவாக சென்று வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடன் உதவி திட்டத்தின் கீழ், 3 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. இந்தக் கடன் வழங்கும் திட்டத்தால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயரும் என்பதில் ஐயமில்லை.

வியாபாரத்தை விரிவுபடுத்தல்:

பிரதமரின் இந்தக் கடன் வழங்கும் திட்டத்தால், சிறு வியாபாரிகள் (Small traders) தங்களது வியாபாரித்தை விரிவுப்படுத்தி, மென்மேலும் உயர் நிலையை அடைய வழிவகுக்கும். சாலையோர வியாபாரிகளுக்கும், தெருத்தெருவாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் இது நற்செய்தியாகும். கடன் பெற, தங்களுக்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு (Cooperative Bank) சென்று விண்ணப்பிக்கலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

கடன் தவணை மீதான கூட்டுவட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு!

கொரோனாவால், ஆயுத பூஜையில் பழங்கள் விற்பனை 50% குறைவு!

English Summary: Credit assistance scheme for small businesses! Prime Minister Modi has started!
Published on: 28 October 2020, 12:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now