மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 December, 2021 4:29 PM IST
Government sets new stock limits on soymeal until June 2022

கோழித் தீவனத் தொழிலில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் சோயாமீல், பதுக்கல்களைத் தடுக்கவும், உள்நாட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் ஜூன் 2022 வரை கையிருப்பு வைத்திருக்கும் வரம்புகளை ஒன்றிய அரசு வெள்ளிக்கிழமை விதித்துள்ளது. இந்த வரம்புகள் ஜூன் 30,2022 வரை நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி வந்துள்ளது.

பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட்ஸ், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவற்றையும் தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. மேலும் மீன் தோல் கழிவுகள், இறைச்சி கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித் தீவனமாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடதக்கது.

சமீபத்தில், பதுக்கல்கள் அதிகமாகி வரும் நிலையில், விலை கட்டுகடங்காமல் உயர்வதை காண முடிகிறது. ஆகவே இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில், அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. கோழித் தீவனத் தொழில் மிக முக்கியமான பொருள் சோயாமீல் ஆகும்.

இந் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள்  சட்டத்தின் 1955 அட்டவணையில் திருத்தம் செய்து ஜூன் 30,2022 வரை சோயாமீலை அத்தியாவசியப் பொருளாக அறிவிக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சோயாமீல் செயலிகள், மில்லர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் அதிகபட்சமாக 90நாட்கள் உற்பத்தியை கையிருப்பில் வைத்திருக்க முடியும், மேலும் அவர்கள் சேமிப்பு இடத்தை அறிவிக்க வேண்டும்.

அரசால் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட சேமிப்பு இடத்துடன் அதிகபட்சமாக 160டன்  இருப்பு வைத்திருக்க முடியும்.

இது தவிர அதிக கையிருப்பு வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

சிவப்பு முள்ளங்கி பயிரிட்டால் நல்ல மகசூல் பெறலாம்

விவசாயிகளின் பொருளாதாத்திற்கு மஞ்சள் ஒரு 'பூஸ்டர் டோஸ்'

English Summary: Government sets new stock limits on soymeal until June 2022
Published on: 27 December 2021, 04:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now