மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 June, 2022 3:10 PM IST
Higher Education Scholarship Scheme: Here is the application details!

Chennai : தமிழக அரசின் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின்படி, இளநிலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவியரின் விபரங்களை, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் வரும், 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், அனைத்து வகை பல்கலைகளின் பதிவாளர்களுக்கு, தமிழக உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், இளநிலை படிக்கும் மாணவியருக்கான மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம், நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலையில் உயர்கல்வியை தொடரும் மாணவியர், இத்திட்டத்தில் பயன்பெறுவார் என்பது குறிப்பிடதக்கது. விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையத்தளம் கிழே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: News Update: இன்றைய முக்கிய செய்திகள்

RBI update: கிரெடிட், டெபிட் கார்டு 'டோக்கனைசேஷன்' காலக்கெடு நீட்டிப்பு

இதற்காக இன்று முதல், 30ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சிறப்பு முகாம் அமைத்து, https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவியரின் விபரங்களை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு பள்ளிகள், மாநகராட்சி, பஞ்சாயத்து ஒன்றியம், ஆதி திராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த, மாணவியரின் வங்கி கணக்கு மற்றும் அரசு பள்ளி விபரங்களை, இதில் பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் நகல்
வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு நகல்
10ம் வகுப்பு மதிப்பெண் நகல்
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல்
பள்ளி மாற்று சான்றிதழ் நகல்

ஆகியவற்றை, மாணவியர் கல்லுாரிகளுக்கு எடுத்து வந்து பதிவு செய்ய வேண்டியிருக்கும். மாணவியர் தாங்களாகவும் இணையதளத்திலும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இந்த பதிவுகளை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து, கல்லுாரி முதல்வர்களுக்கு உரிய வழிமுறைகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. டவுன்லோட் லிங்க் இதோ!

தமிழ்நாடு கிராம வங்கி ஆட்சேர்ப்பு 2022: விவரம் உள்ளே!

English Summary: Higher Education Scholarship Scheme: Here is the application details!
Published on: 27 June 2022, 03:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now