மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 January, 2022 2:58 PM IST
Is the minimum monthly pension rising to 9000 rupees? Find out

விரைவில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் அதாவது EPFO Pension Scheme ஒன்பது மடங்கு வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9,000மாக உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employees Pension Scheme) சந்தாதாரர்களுக்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

பிப்ரவரியில் முடிவு அறிவிக்கப்படலாம்

இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் பிப்ரவரி மாதத்தில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதாவது (Minimum Monthly Pension) பற்றிய முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் இருப்பது குறிப்பிடதக்கது, எனவே முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என ஓய்வூதியர்கள் (Pensioners) நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை விவாதமும் நடந்துள்ளது. இது மட்டுமின்றி நாடாளுமன்ற நிலைக்குழுவும் இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கியிருந்தது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரைவில் குறைந்தபட்ச ஊதியம் 1,000 ரூபாயிலிருந்து, 9,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்புகள் உள்ளன.

மார்ச் 2021 இல் இது தொடர்பான பரிந்துரைகள் அறிமுகப்படுத்தப்பட்டது, குறிப்பிடதக்கது. இது தொடர்பாக, 2021 மார்ச்சில், நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆலோசனைகளை வழங்கியது. இதன்போது, ​​குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை தற்போதுள்ள ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக உயர்த்த வேண்டும் என அக்குழு தெரிவித்தது. கொரோனா காரணமாக இது குறித்த இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை, எனினும் வரவிருக்கும் இபிஎஸ் இன் 95 என்-அசிடைல் சிஸ்டைன் (N95-acetyl cysteine) குழுவில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாளியாகியுள்ளதும் குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

அரசு உதவிக்கு பின்னும், கால்நடையில் வளர்ச்சி இல்லை. ஏன்?

தன்னியக்க டிராக்டர் தொழில்நுட்பம் - விவசாயிகளுக்கு நல்ல தீர்வு

English Summary: Is the minimum monthly pension rising to 9000 rupees? Find out
Published on: 05 January 2022, 02:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now