மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 February, 2022 3:46 PM IST
JSY: Janani Suraksha Yojana: Rs 3400 financial assistance for women, how to apply?

ஜனனி சுரக்ஷா யோஜனா: நாடு முழுவதும் பெண்களுக்காக ஒன்றிய அரசு பல தனித்துவமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஒன்றிய அரசின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றைப் பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

BPL பெண்களுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது (Government Provides Financial Assistance To BPL Women)

இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மொத்தம் ரூ.3400 நிதியுதவியை அரசு வழங்குகிறது. இந்த கருத்துக்கான விளக்கத்தை, இப்போது பார்ப்போம். நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு பல்வேறு முறைகளில் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில், இந்த நிதியுதவி கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் திட்டமாகும்.

கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக இத்திட்டம் (Scheme Implemented To Health of Pregnant Women)

செயல்படுத்தப்பட்டது, ஜனனி சுரக்ஷா யோஜனா என்பது நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் பெயராகும்.

ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணி மற்றும் குறைந்த வருமானம் உள்ள பெண்களுக்கு அரசு ரூ.1400 நிதி உதவி வழங்குகிறது. பிரசவ நேரத்திற்கு உதவ ஆஷா சஹாயக்கிற்கு (ASHA Sahayak) 300 ரூபாய் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பிரசவத்திற்கு பின்னும் ரூ.300 வழங்கப்படுகிறது.

அரசு பிரசவத்தின்போது பெண்களுக்கு ரூ.1,000 வழங்குகிறது (The government provides Rs.1,000 for women during childbirth)

பிரசவத்தின்போது ரூ.1,000 நிதியுதவி பெறும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

ASHA Sahayak பிரசவ ஊக்கத்தொகையாக 200 ரூபாயும், பிரசவத்திற்குப் பிந்தைய உதவியை வழங்குவதற்காக மேலும் 200 ரூபாயும் பெறும். இவ்வாறு மொத்தம் ரூ. 400 விநியோகிக்கப்படும்.

ஜனனி சுரக்ஷா திட்டத்தின் கீழ் தேவையான ஆவணம் (Required document under Janani Suraksha scheme)

ஆதார் அட்டை, பிபிஎல் ரேஷன் கார்டு, முகவரிச் சான்று, இருப்பிடச் சான்றிதழ், ஜனனி சுரக்ஷா அட்டை, அரசு மருத்துவமனை வழங்கும் டெலிவரி சான்றிதழ், வங்கிக் கணக்கு பாஸ்புக், மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அனைத்தும் இந்தத் திட்டத்திற்குத் தேவையாகும். இந்த திட்டத்தில் இணைய, ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

படிவத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி? (How to download the form?)

படிவத்தை இங்கே கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . இந்த படிவத்தில், தேவையான அனைத்து தகவல்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும்.

மேலும் படிக்க:

மீண்டும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு, இந்திய அரசு தடை!

புதிய 17 பயிர் ரகங்கள், விவசாயிகள் பயன் பெற அழைப்பு! விவரம் உள்ளே

English Summary: JSY: Janani Suraksha Yojana: Rs 3400 financial assistance for women, how to apply?
Published on: 15 February 2022, 03:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now