மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 June, 2020 5:56 PM IST

கொரோனா ஊரடங்கையொட்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் PM- kisan திட்டத்தின் மூலம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையலாம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார் .

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா தொற்று நோய் மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களால் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களில் வேலையை இழந்து வாழ்வாதரத்திற்காக மீண்டும் அவர்களின் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் விவசாய சமூகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் (PM Kisan Samman Nidhi Yojana)புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இணையலாம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கும் விவசாயிகளைப் போன்று ரூ.2000 உதவித்தொகை அவரவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் பயனைப் பெற வேளாண் நிலத்தின் ஆவணங்களைத் தவிர, வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் ஆகியவை அவசியம் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பலனடையாத 70லட்சம் விவசாயிகள்

இத்திட்டத்தின் கீழ், இது வரை மத்திய அரசு ஐந்து தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் வழங்கியுள்ளது. இந்நிலையில், நிதி பெற விண்ணப்பித்த விவசாயிகளில் சுமார் 70 லட்சம் பேருக்கு சிறு சிறு தவறுகளால் நிதியுதவி கிடைக்கப்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 14.5 கோடி விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. ஆனால் இதுவரை 9.68 கோடி விவசாயிகள் மட்டுமே இதன் பலனை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் வாய்ப்பு

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நிதியைப் பெற விவசாயிகள் பதிவுசெய்திருந்தும், பணம் கிடைக்கப்பெறவில்லை எனில், உங்கள் ஆவணத்தில் தவறுகள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது உங்கள் ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்கு எண் தொடர்பான தகவல்களை தவறாக பதிவாகி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த விடுபட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் தவறுகளை சரிசெய்து மீண்டும் விண்ணப்பித்து பலனை பெற மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
அதன்படி, பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு https://pmkisan.gov.in/ சென்று உங்களின் தவறுகளை சரி செய்துக்கொள்ள முடியும். உங்கள் பெயரில் வேறு ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் உங்கள் கணக்காளர் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

பதநீரைக் குளிர்பானமாக மாற்ற புதிய திட்டம்

PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்

English Summary: Migrant Workers also Now get benefit under PM-Kisan Yojana
Published on: 19 June 2020, 05:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now