அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 July, 2020 9:19 PM IST

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செலுத்த முதல் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் 10 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM-Kisan திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியைப் பெற விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்கவேண்டும்.

அடுத்த தவணை எப்போது? (Next payment)

இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு இந்த ஆண்டுக்கான முதல் தவணையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணை வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பி.எம் கிசான் திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in இல் சரிபார்க்கலாம் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் தங்கள் ஆதார் அட்டை, வங்கி விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் தனிப்பட்ட விவரங்களையும் வழங்க வேண்டும்.

இந்த திட்டத்தில் மேலும் விவசாயிகளை இணைக்க மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் விவசாயிகள் தவறான விவரங்களை பதிவு செய்வதால் மானியம் பெற தகுதியுடை விவசாயிகளுக்கு மானியம் சென்று சேருவதில் சிக்கல் நீடித்து வருதாக கூறப்படுகிறது.

உங்களின் நிலை எப்படி அறிவது (Know your Status)

இதனை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in இல் Farmers Corner - என்பதை கிளிக் செய்வதன் மூலம் விவசாயிகள் தங்களின் நிலையை அறிந்துகொள்ள முடியும், மேலும் சரியாக புதுப்பிக்கப்படாத எந்த விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து சரி செய்துக்கொள்ள முடியும்.

மேலும் விண்ணப்பித்து பயன்பெற முடியாத விவசாயிகள் 011-24300606 என்ற இலவச எண்ணுக்கு அழைப்பு விடுத்து தங்களது வங்கி கணக்கு வரவு விபரங்களை சரிபார்த்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விபத்தில் சிக்குவோருக்கு பணமில்லா சிகிச்சை: மத்திய அரசு புதிய திட்டம்!!

PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!

English Summary: PM Kisan schemes sixth instalment of ₹2,000 will be sent to more than 10 crore beneficiaries starting 1st of August.
Published on: 13 July 2020, 07:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now