நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 August, 2023 12:05 PM IST
Union Cabinet approves PM Vishwakarma Scheme

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா" PM Vishwakarma திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நடைப்பெற்று முடிந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தனது உரையில் “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தங்களது பாரம்பரிய தொழிற் பயிற்சியை வலுப்படுத்துவதையும், அத்தொழிலினை மேலும் வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

குறைந்த வட்டியில் கடனுதவி:

பிரதமரின் விஸ்வகர்மா (PM Vishwakarma) திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டு ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் பயன்படும். இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும்.

முதற்கட்டமாக பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பின்வரும் 18 பாரம்பரிய தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

  1. தச்சர்
  2. படகு தயாரிப்பாளர்
  3. கவசம் தயாரிப்பவர்;
  4. கொல்லர் (லோஹர்)
  5. சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்;
  6. பூட்டு தயாரிப்பவர்
  7. பொற்கொல்லர் (சோனார்);
  8. குயவர் (கும்ஹார்);
  9. சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்;
  10. காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்;
  11. கொத்தனார் (ராஜமிஸ்திரி);
  12. கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்;
  13. பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்);
  14. முடி திருத்தும் தொழிலாளர் (நயி);
  15. பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்);
  16. சலவைத் தொழிலாளி (டோபி);
  17. தையல்காரர் (டார்ஸி);
  18. மீன்பிடி வலை தயாரிப்பவர்.

PM Vishwakarma திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் இத்திட்ட த்தினை செயல்படுத்துவதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என கருதப்படுகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் பல லட்சம் கைவினைஞர்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று பலன் அடைவார்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் காண்க:

Gold Rate- ஒரே நாளில் சென்னை- கோவையில் தங்கத்தின் விலை அதிரடி சரிவு

ஓஹோ.. சிறுநீர் இந்த கலர்ல எல்லாம் போக காரணம் இதுதானா?

English Summary: Union Cabinet approves PM Vishwakarma Scheme
Published on: 17 August 2023, 12:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now