மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 October, 2021 8:16 PM IST
Credit : Amazon.in

பால்மனம் மாறாப் பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது இளம் தாய்மார்களுக்கு தற்போது சவாலாகவே (Tough Task) உள்ளது.

ஆயிரம் சிக்கல் (A thousand problems)

பட்டப்படிப்பு, படிப்புக்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என அடுத்தடுத்து வாழ்வில் எல்லையைத் தொட்டுவிட்ட இளம் பெண்கள் பலரும், புரியாமல் தவிர்த்து நிற்கும் இடம் என்றால் அது குழந்தை வளர்ப்புதான்.

அதிலும் பச்சிளங்குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது என்பது இயலாத ஒன்றாக இருக்கும். குழந்தை எதற்காக அழுகிறது?என்பதை அறிந்து கொள்வதில், ஆயிரம் சிக்கல் ஏற்படும்.

தனிக்குடித்தனம் (Monogamy)

மாமியார், பாட்டி, என மூத்தோர் வீட்டில் இருந்தார்கள் என்றால், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது மிக மிக சுலபம்.

ஆனால் மார்டன் உலகில் பெரும்பாலும் தனிக்குடித்தனம் என்றத் தனித் தீவில் மையம்கொண்டதால், குழந்தை வளர்ப்பில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறு அவதிப்படும் இளம் தாய்மாரா நீங்கள்? அப்படியானால், இந்தத் தகவல் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

காய்ச்சல் (Fever)

  • குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும்.

    வீறிட்டு அழும்.

  • திடீரென்று தன் தாயைச் சேர்த்து அணைத்துக்கொள்ளும்.

  • இலேசாக இருமிக்கொண்டே இருக்கும்.

  • பால் குடிக்காது.

  • உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும்.

  • உமிழ்நீர் சூடாக இருக்கும்.

  • அடிக்கடி கொட்டாவி விடும்.

அக்கி உண்டானால்

  • குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும்.

  • அடிக்கடி அழும்.

  • காய்ச்சல் இருக்கும்.

  • உதடுகள் வறண்டு காணப்படும்.

  • வயிற்றுப் பொருமல்

  • குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும்.

  • அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும்.

  • கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும்.

  • உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது.

  • மலம் வெளியேறாது.

காமாலை

  • குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாகத் தோன்றும்.

  • பசியில்லாமல் இருக்கும்.

  • பால் குடிக்காது.

  • சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.

  • மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.

விக்கல்

  • மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும்.

  • குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும்.

  • திடீரென்று ஏப்பம் விடும்.

நாக்கில் பாதிப்பு

  • உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும்.

  • சில சமயங்களில் புள்ளிப் புள்ளியாகப் புண்கள் காணப்படும்.

  • வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

தொண்டைப் பிடிப்பு

  • இலேசான ஜூரம் இருக்கும்.

  • குழந்தைக்கு எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும்.

காது பாதிப்பு

  • கையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும்.

  • தூக்கமிருக்காது.

  • பால் குடிக்காது.

  • கழுத்தில் பாதிப்பு

  • குடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும்.

  • பசி எடுக்காது.

  • காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாகக் காணப்படும்.

வயிற்றுவலி

  • குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது.

  • நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும்.

  • உடல் குளிர்ந்திருக்கும்.

  • முகம் வியர்த்துக் காணப்படும்.

இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

பலவகைகளில் கஷ்டப்பட்டுப் பெற்றக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டியது,தாயாரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

மேலும் படிக்க...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்!

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

English Summary: Diseases of young children- Some tips to know!
Published on: 20 October 2021, 09:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now