Health & Lifestyle

Friday, 15 July 2022 03:48 PM , by: Poonguzhali R

Medicinal Benefits of Tamarind

புளி என்பது நமது சமையலறையில் இன்றியமையாத ஒரு பொருள் ஆகும். இது சமையலில் பெரிய முக்கியத்துவம் உடையதாக இருக்கின்றது. ஊட்டச்சத்து அடிப்படையில், புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின் B1, B3 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றுடன் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையைக் கொண்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் ஸ்பைக் அபாயத்தைக் காரணம் காட்டி புளி சிறிய அளவில் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதால் பல நன்மைகள் இருக்கின்றது.

1. எடை குறைப்பு: சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருந்தாலும், புளியில் கொழுப்புச் சத்து இல்லை. கூடுதலாக, அதன் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் எடை குறைப்பதில் நன்றாக வேலை செய்கின்றன. இந்த பழத்தில் உள்ள நொதிகள் பசியை நிர்வகிப்பதற்கும், எடை மேலாண்மைக்கான கலோரி நுகர்வை குறைக்கவும் செய்கிறது.

மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!

2. செரிமானம்: மாலிக், டார்டாரிக் மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் காரணமாக புளி ஒரு மலமிளக்கியாக உள்ளது, இது வயிற்று தசைகளை வலிமையாக்குகிறது. இதனால் வயிற்றுப்போக்குக்கு ஒரு சக்திவாய்ந்த தீர்வாக இது அமைகிறது.

3. ஆரோக்கியமான இதயம்: புளியில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கெட்ட கொழுப்பின் (எல்.டி.எல்) அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் (எச்.டி.எல்.) அளவை அதிகரிக்கவும் உதவுகிறது, இதனால் தமனிகளில் கொழுப்பு சேரும் அபாயத்தைத் தடுக்கிறது. பொட்டாசியம் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.

4. வயிற்றுப் புண்களைத் தடுக்கிறது: சிறுகுடல் மற்றும் வயிற்றின் உட்புறப் பகுதியில் உருவாகும் வயிற்றுப் புண்கள் மிகுந்த வலியை உண்டாக்கும். இதைச் சாப்பிடுவது வயிற்றுப் புண்களின் அபாயத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

5. கல்லீரலைப் பாதுகாக்கும்:புளி  கல்லீரலையும் பராமரிக்கும். புளியின் வழக்கமான கல்லீரல் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாகும். எனவே, புளியின் மருத்துவப்பயனை அறிந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும் படிக்க

50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

தக்காளி விலையில் சரிவு! ஒரே மாதத்தில் 60% குறைவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)