Health & Lifestyle

Saturday, 09 July 2022 05:04 PM , by: Poonguzhali R

Easy Ways to Get Rid of Dark Under Eyes!


இன்றைய பலரும் தொலைபேசி பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. அதில் மிகக் குறிப்பிடத்தகுந்தது கண்களுக்கு கீழ் உள்ள கருமை ஆகும். இது முகத்தின் அத்துனை அழகையும் கெடுத்துவிடுகின்றது. அத்தகைய கண்ணின் கருமையைப் போக்க எளிய வழிகளை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் இயற்கையாகவே சருமத்தை ஒளிரச் செய்து, மிதமான அஸ்ட்ரிஜென்ட் விளைவைக் கொண்டிருப்பதால், கண்களுக்கு சிகிச்சையளிக்க வெள்ளரித் துண்டுகளைப் பயன்படுத்தலாம். ஒரு புதிய வெள்ளரியை தடிமனான துண்டுகளாக நறுக்கி, 30 நிமிடங்கள் குளிரவைத்து, தினமும் இரண்டு முறை இந்த செயல்முறையை சோதிக்கலாம்.

மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!

தேங்காய் எண்ணெய்

கண்களுக்குக் கீழே உள்ள கருமையைப் போக்க தேங்காய் எண்ணெய் நன்றாக வேலை செய்கிறது. இது ஹைட்ரேட் கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைத் தவிர்க்க உதவுகிறது. வைட்டமின் ஈ எண்ணெயைப் போலவே கண்களுக்குக் கீழே உள்ள பகுதியிலும் தேங்காய் எண்ணெயைத் தடவி, இரவு முழுவதும் வைத்து, காலையில் கழுவினால் சிறந்த பலனைப் பெறலாம்.

மேலும் படிக்க: நம் சமையலறையிலே இருக்கும் 5 சிறந்த வலி நிவாரணிகள்!

 

உருளைக்கிழங்கு மாஸ்க்

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கு துண்டுகளைக் கண்களுக்கு அடியில் வைப்பது, கொலாஜனை அதிகரித்து, கருவளையங்களுக்கு ஊட்டத்தை அளிப்பதால், ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.

ஆரஞ்சு எலுமிச்சை சாறு

வைட்டமின் ஏ மற்றும் சி செறிவு காரணமாக, ஆரஞ்சு சாறு கண்களுக்குக் கீழே உள்ள கருமையான வட்டங்களைக் குறைக்க உதவுகிறது. உங்கள் கண்களைச் சுற்றியுள்ள தோலுக்கு சிகிச்சையளிக்க சில துளிகள் கிளிசரின் சேர்த்து ஆரஞ்சு சாற்றில் ஊறவைத்த காட்டன் மேக்கப் ரிமூவல் பேடைப் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளி எலுமிச்சை சாறு

எலுமிச்சைச் சாறுடன் தக்காளிச் சாற்றைச் சம பாகங்களாகச் சேர்த்து, மேக்கப் ரிமூவர் பேடைப் பயன்படுத்திக் கண்களுக்குக் கீழே அப்ளை செய்யலாம். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும், தினமும் இரண்டு முறை செய்தால் நல்ல பலனைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

மேலும் படிக்க

TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

TET/TRB: தற் மிடில் பெர்த் கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)