அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 May, 2022 3:19 PM IST
Eating small onions soaked in honey on an empty stomach.....

சின்ன வெங்காயத்தில் மருத்துவ குணங்கள் அதிகம். தேனில் ஊறவைத்த இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும். அவை என்னவென்று இந்த குறிப்பில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் உள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பலம் பெறும் மற்றும் பருவகால தொற்று நோய்களைத் தவிர்க்கலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்த:

ரத்தத்தை சுத்திகரிக்க சின்ன வெங்காயம் பயன்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? தேனில் ஊறவைத்த வெங்காயம் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்த ஓட்டம் சீராகும்.

அஜீரணத்தை போக்க:

சின்ன வெங்காயம் மற்றும் தேன் இரண்டிலும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது அஜீரணம் கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.

நச்சு நீக்கம்:

சின்ன வெங்காயம் மற்றும் தேன் இரண்டும் நச்சு நீக்கும் தன்மை கொண்டது. தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, ரத்தத்தில் உள்ள மற்ற கழிவுகளை வெளியேற்றி, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும்.

தூக்கக் கோளாறுகள்:

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் கேட்ஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, மாறிய வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறலாம்.
இவை அனைத்திலும் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை சின்ன வெங்காயம் தீர்க்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா, சளி, நுரையீரல் பிரச்சனைகளுக்கு சின்ன வெங்காயம் சிறந்த மருந்தாக உள்ளது.இந்தப் பிரச்சனைகள் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.

மார்பு சளியை போக்க:

பொதுவாக சளி பிடித்தால் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வெந்நீர் குடிப்பது வழக்கம்.
சின்ன வெங்காயத்தை சாறு செய்து சம அளவு தேனில் கலந்து சாப்பிடுவது போன்றவற்றை நம் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வந்துள்ளனர். அதை பின்பற்றாமல் விட்டுவிட்டோம்.

நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் படுக்கும் முன் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

தொப்பையை குறைக்க:

இந்த தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.
குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கும்.

தேன் வெங்காயம் செய்வது எப்படி?

ஒரு சுத்தமான பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்து கொள்ளவும்.

அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய (அப்போதுதான் தேனுடன் ஊறும்) சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும்.
அதைத் கைபடாமல் இரண்டு நாட்கள் ஓரமாக வைக்க வேண்டும்.

இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். நீங்க போட்டதை விட கொஞ்சம் மெலிதாக இருந்திருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் கலந்து ஊறியிருக்கும்.

இதை தினமும் காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க:

மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்

அறுவடை நேரத்தில் பதம்பார்த்த மழை- 25 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காயம் பாழானது!

English Summary: What are the benefits of eating small onions soaked in honey on an empty stomach!
Published on: 19 May 2022, 02:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now