Health & Lifestyle

Monday, 07 March 2022 07:41 AM , by: Elavarse Sivakumar

நீங்கள் அதிகம் அறிந்திடாத ஆயிரம் நன்மைகள் நம் சமையல் அறையில் உள்ள பூண்டில் நிறைந்துள்ளது. அந்த அத்தனை நன்மைகளையும் பூண்டு தேநீர் குடிப்பதன் மூலம் நாம் அப்படியேப் பெறவும் முடிகிறது என்பது உண்மை. பூண்டு தேநீரில் பல வித ஆச்சரியமான குணங்களும் அதிசய பலன்களும் உள்ளன. பூண்டு டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் உண்டாகின்றன.

தேநீர் என்பது நமது உடலுக்கு தெம்பையும், மனதுக்கு ஒருவிதப் புத்துணர்ச்சியும் அளிக்கும் பானமாகும். அதனால்தான் நாம் அனைவருமே தேநீர் குடிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறோம். அதிலும், தேநீரில் இஞ்சி, புதினா, எலுமிச்சம்பழம், லவங்கம் என பல வித பொருட்களை போட்டு மசாலா டீ அருந்துகிறோம். ஆனால், பூண்டு டீ பற்றித் தெரியுமா? இது உண்மைலேயே வித்தியாசமானது.

7 அதிசய நன்மைகள்

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பூண்டு தேநீரில் சிறிது இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கலாம். இப்படி செய்வதால், இதன் ஆரோக்கிய நன்மைகள் மேம்படும். தேநீர் சுவையும் அதிகரிக்கும்.

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு தேநீர் மிகவும் நன்மை பயக்கும். இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் வளர்சிதை மாற்ற நிலையில் இது உதவுகிறது.

அழுக்குகள் Out

பூண்டு டீ சாப்பிட்டால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
இந்த தேநீர் உங்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு போட்ட தேநீர், இது எடை இழப்புக்கு உதவுகிறது.

கொலஸ்ட்ராலுக்கு குட்பை

பூண்டு தேநீர் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதனை உட்கொள்வதால் இரத்த ஓட்டம் மேம்படும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

காய்ச்சலைக் குணப்படுத்தும்

பூண்டு தேநீர் சுவாச நோய்களில் இருந்து பாதுகாக்கும். குளிர் காலத்திலும் இதை சாப்பிட்டு வர காய்ச்சல் மற்றும் இருமல் குணமாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

இந்த தேநீர் ஒரு சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் பானமாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

வீக்கம்

பூண்டு தேநீர் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கிறது.

தயாரிப்பது எப்படி?

  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

  • சிறிது நேரம் கழித்து, நறுக்கிய பூண்டையும் அதில் சேர்க்கவும்.

  • இதனுடன், ஒரு ஸ்பூன் கருப்பு மிளகு சேர்த்து, பின்னர் இந்த தேநீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  • ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தேநீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.

மேலும் படிக்க...

200 ஆடுகள், 2500 கிலோ பிரியாணி- சுடச்சுட பிரியாணிப் பிரசாதம்!

புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னைக்கு ஆபத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)