நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 October, 2021 2:32 PM IST
Aquaponics: Is plant growth possible with fish waste?

பெரும்பாலான தோட்டக்காரர்கள் மீன் கழிவுகளை கொண்டு செய்யப்படும் உரத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள், பதப்படுத்தப்பட்ட மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் உரம், முக்கியமாக தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் மீன் கழிவுகள். குளத்தில் இருந்து வெளியே கீழே கிடக்கும் மீனின் கழிவுகளை வைத்து தாவரங்களுக்கு உரமிடுவது அவற்றிற்கு நன்மை பயக்குமா என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.

மீன் கழிவுகளை வைத்து தாவரங்களுக்கு உணவளிப்பது நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் முறையாகும் மற்றும் இது அக்வாபோனிக்ஸின் (Aquaponics) முக்கிய நன்மை முதலில் அக்வாபோனிக்ஸ் என்றால் மீன் வளர்ப்பு முறை, இதில் வளர்க்கப்படும் மீன் அல்லது பிற நீர்வாழ் விலங்குகளால் உற்பத்தி செய்யப்படும் கழிவுகள் ஹைட்ரோபோனிக்கல் முறையில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, இது தண்ணீரை சுத்திகரிக்கிறது.

மீன் கழிவுகள் எவ்வாறு தாவரங்கள் வளர உதவுகின்றன?

மீனின் கழிவுகள் ஏன் தாவரங்களுக்கு நல்லது என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

மீன் கழிவு தாவரங்களுக்கு நல்லதா?

சரி, மிகவும் பிரபலமான கரிம உரங்களில் ஒன்று தாவரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் உரம் ஆகும், எனவே மீன் மலம் தாவரங்களுக்கும் நல்லது என்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மீன் கழிவுகள் தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்போது, அது இயற்கையாக பெறப்பட்ட NPK ஊட்டச்சத்துக்களை மட்டுமல்லாமல் நுண்ணூட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

இந்த மீன் உரத்தின் சில வணிக பிராண்டுகளில் குளோரின் ப்ளீச் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, இது ஒரு தோட்டத்திற்கு இல்லை. எனவே, உங்கள் சொந்த குளம் அல்லது மீன்வளத்திலிருந்து மீன் கழிவுகளை வைத்து தாவரங்களுக்கு உணவளிப்பது உகந்தது, குளத்தை சுற்றியுள்ள புல்வெளியை கையாளுவதற்கு நீங்கள் களைக்கொல்லிகளைப் பயன்படுத்த தேவையில்லை.

மீன் கழிவு தாவரங்கள் எவ்வாறு வளரும்?

மீன் கழிவுகளை தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. மீன் கழிவு என்பது மீனின் மலப் பொருள். இது உரமாக கருதப்படுகிறது, இந்தக் கழிவுகள் உயிரியல் செயல்பாடு மற்றும் நன்கு சீரான, அத்தியாவசிய தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களால் நிறைந்துள்ளது.

இதன் பொருள் மீன் கழிவுகளை பயன்படுத்தி தாவரங்களுக்கு உணவளிப்பது செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது, மேலும் மண்ணிற்கு பல உயிரியல் நன்மைகளை சேர்க்கிறது. தாவர வளர்ச்சிக்கு மீன் கழிவுகளைப் பயன்படுத்துவது தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் இது திரவ வடிவில் வருகிறது, இது சாதாரண உரங்களை விட விரைவாக தாவரங்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

அக்வாபோனிக்ஸின் நன்மைகள்

மீன் வளர்ப்புடன் இணைந்து நீரில் தாவரங்களை வளர்க்கும் அக்வாபோனிக்ஸ், ஆசிய விவசாய நடைமுறைகளுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது தண்ணீர் மற்றும் மீன் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு பொருட்களை உற்பத்தி செய்கிறது. அக்வாபோனிக்ஸின் பல நன்மைகள் உள்ளன.

வளரும் இந்த அமைப்பு நிலையானது, குறைந்த பராமரிப்பு, மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் அல்லது எண்ணெய் போன்ற வரையறுக்கப்பட்ட மற்றும் விலையுயர்ந்த வளங்களைப் பயன்படுத்தாமல் உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்குகிறது.

அக்வாபோனிக்ஸ் அமைப்பு இயற்கையாகவே உயிரி-ஆர்கானிக் ஆகும், அதாவது அதிக ரசாயன உரங்கள் சேர்த்தால் மீன்கள் இறக்கக்கூடும் என்பதால் கூடுதல் உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதில்லை, மேலும் அவை தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் மீன்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

நீங்கள் அக்வாபோனிக்ஸ் பயிற்சி செய்யாவிட்டாலும், உங்கள் தாவரங்கள் மீன் கழிவுகளைச் சேர்ப்பதன் மூலம் பயனடையலாம், குறிப்பாக உங்களிடம் மீன் இருந்தால்.

உங்கள் மீன் தொட்டி அல்லது குளத்தில் உள்ள தண்ணீரை உங்கள் செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தவும். நீங்கள் மீன் கழிவு உரத்தையும் வாங்கலாம் ஆனால் குளோரின் மூலம் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க அதன் பொருட்கள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

English Summary: Aquaponics: Is plant growth possible with fish waste?
Published on: 07 October 2021, 02:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now