மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 October, 2021 7:31 AM IST

தருமபுரி மாவட்ட விவசாயிகள் உயிா் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

மலடாக்கும் ரசாயனம்

ரசாயன உரங்கள் மண்ணை மட்டுமல்லாமல், இந்த உரத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களைச் சாப்பிடும் மனிதர்களையும் மலடாக்கும் தன்மை கொண்டது. எனவே இதனைக் கருத்தில்கொண்டு உயிர் உரங்களின் பக்கம் விவசாயிகள் கவனம் திரும்பியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

உரம் கையிருப்பு (Fertilizer stock)

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான யூரியா உரங்கள் 8,617 டன் இருப்பு உள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் மேற்கொண்டு வரும் சாகுபடி பணிகளுக்கு தேவையான யூரியா மற்றும் உரங்கள் அனைத்து கூட்டுறவு, தனியாா் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யூரியா, உரங்களின் பயன்பாட்டுக்கேற்ப அவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு (Environmental pollution)

தேவைக்கு அதிகமாக அல்லது பரிந்துரை அளவைவிடக் கூடுதலாக உரங்கள் பயன்படுத்துவதால் நோய்த் தாக்குதல், மண் மற்றும் சுற்றுச் சூழல் மாசு போன்ற இடா்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெறுவது எப்படி? (How to get?)

எனவே ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிா்க்க அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிா் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Distribution of Bio Fertilizers to Farmers - Department of Agriculture Instruction!
Published on: 26 October 2021, 07:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now