Horticulture

Sunday, 11 October 2020 09:18 AM , by: Elavarse Sivakumar

Credit : Pinterest

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், விதை முளைப்பு திறன் பரிசோதனை செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது.

கிணத்துக்கடவு வேளாண் விரிவாக்க மையத்தில், சோளம் 'கே12' (K 12) சான்று நிலை விதையும், தட்டை பயறு 'சிஓசிபி7' (COCB) என்ற விதையும் முளைப்பு திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் முயற்சியில், இரண்டு தட்டுகளில் தனித்தனியாக, 50 விதைகளை போட்டு கடந்த மாதம், 28ம் தேதி விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்த நாளில் இருந்து, எட்டு முதல் 12 நாட்களில் விதையின் முளைப்பு திறன் சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவேட்டில் பதிவு செய்து, விதைகளை வாங்க வரும் விவசாயிகளுக்கு முளைப்பு திறன் சதவீதம் குறித்து விபரம் தெரிவித்து, விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விரு விதைகளும், 75 சதவீதம் முளைப்பு திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதில் சோளம், 4,250 கிலோவும், தட்டை பயறு 400 கிலோவும் இருப்பு உள்ளது. எனவே இதனை விவசாயிகள் வாங்கி, விதைப்பு செய்து பயன்பெறலாம்.

தகவல்
அனந்தகுமார்
வேளாண் உதவி இயக்குனர்

மேலும் படிக்க...

இயற்கை கழிவுகளை உரமாக்கும் நுண்ணுயிர் கூட்டுக் கலவை- TNAUவின் தயாரிப்பு!

பயிர்களின் ஊட்டச்சத்து மருந்தான பழக்கரைசல்! தயாரிப்பது எப்படி?

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)