நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 December, 2021 10:45 AM IST
Credit : Seithipunal

பருவமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப விரதம்

பொதுவாகக் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, விரதம் கடைப்பிடிக்கும் மாதம். இதனால், கோவில்கள், பக்தர்கள் சபை உள்ளிட்ட இடங்களில் பூக்களின் தேவை அதிகளவில் இருக்கும்.

அதேநேரத்தில், இந்த மாதங்களில் பருவமழை மற்றும் பனிப்பொழிவு உள்ள காலங்கள் என்பதால், பூச்சந்தைகளில் பூக்கள் வரத்தும் குறைவாகவேக் காணப்படும். இதனால் பூக்களின் விலை, கடந்த மாதங்களில் கூடுதலாக இருப்பது வாடிக்கை.

பூக்கள் வரத்து

அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, நிலக்கோட்டை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் மாதம் பெய்த மழை மற்றும் தற்போதுள்ள பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ வரத்து உள்ளது.

விளைச்சல் பாதிப்பு (Yield impact)

கார்த்திகை மாதம் சுபமுகூர்த்தங்கள், வீடு கிரஹபிரவேச நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படும் என்பதால், எப்போதுமே இம்மாதம் காய்கறி, பூக்கள் விலை அதிகமாகவே இருக்கும். ஆனால், இம்முறை மழையால் விளைச்சல் பாதிக்க, வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

விலை நிலவரம் (Rate)

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 2,400 முதல் ரூ.3,600 ரூபாய் வரைக்கு விற்பனையானது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி (Customers shocked)

முல்லை ரூ.2,000க்கும், கனகாம்பரம், ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும், ஜாதி மல்லி ரூ.600க்கும், ரோஜா ரூ.200 முதல் 240 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

பூக்களின் இந்த ராக்கெட் வேக விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க...

பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!

நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!

English Summary: jasmine Rs.3.600, Mullai Rs.2,000- flowers rate high!
Published on: 14 December 2021, 10:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now