Horticulture

Tuesday, 01 June 2021 07:20 AM , by: Elavarse Sivakumar

Credit : Periyarpinju

விவசாயிகள் பாசன நீர் குறைந்த பகுதிகளில், சிறந்த மாற்றுப்பயிராக பப்பாளியைப் பயிரிட்டு பயனடையலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீர் சார்ந்த தொழில் (Water based industry)

விவசாயம் என்பதே நீர் சார்ந்த தொழிலாகும். இருப்பினும் இருக்கின்ற நீருக்கு ஏற்றப் பயிர் சாகுபடி செய்யும்போது, அதற்கேற்ற பலனை அடையலாம். குறிப்பாக குறைந்த நீரில் சாகுபடி செய்யக்கூடிய மாற்றுப்பயிர்களை அறிந்துகொண்டு அந்தப் பயிர்களைச் சாகுபடி செய்து கூடுதல் வருமானத்திற்கு வழிவகுக்கும்.

பாசன நீர் பற்றாக்குறை (Lack of irrigation water)

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், சில நேரங்களில், பாசன நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

மாற்றுப்பயிர் (Alternative crop

இதற்குத் தீர்வாக, பாசனநீர் குறைவாக உள்ள புதியஆயக்கட்டு பகுதியில், மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பப்பாளி சாகுபடி (Papaya cultivation)

ஒரு ஏக்கர் பரப்பில், 600 பப்பாளிக் கன்றுகள் வரை சாகுபடி செய்ய முடியும். உழவு செய்து கன்றுகள் நடவு செய்வதில் தொடங்கி, வளர்ந்து மரமாகி காய்ப்பது வரை, சுமார் ரூ.60,000 வரை செலவாகிறது.

25 மாதங்கள் மகசூல் (Yield 25 months

பத்து மாதத்திலிருந்து பப்பாளியைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 25 மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும்.

அதிக நீர் தேவையில்லை (Does not require much water)

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடிக்குக் குறைந்த அளவு பாசன நீர் போதுமானதாகும். அதிக தொழிலாளர்களும் தேவைப்படுவதில்லை.

ஆண்டு முழுவதும் விற்பனை (Sales throughout the year)

பப்பாளிப் பழங்களுக்கு ஆண்டு முழுவதும் தேவையுள்ளதால், போதிய விலையும் கிடைக்கிறது. இங்கு பறிக்கப்படும் பப்பாளிப் பழங்கள், அருகிலுள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால், பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுப்பதாக உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)