மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 August, 2021 2:35 PM IST
Covid - 19

தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் புதன்கிழமை தலா 100 க்கும் குறைவான புதிய தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. பொது சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள தினசரி அறிவிப்பின்படி, மொத்தம் 1,56,386 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில், 1,573 புதிய தோற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் (181), சென்னை (170) மற்றும் ஈரோடு (130) ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. பெரம்பலூரில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் தலா ஏழு வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதுவரை, 26,05,647 நபர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,352 நோயாளிகள் வீட்டில் மற்றும் சுகாதார நிலையங்களிலோ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைக்கு பின்னர் 1,797 பேர் குணமாகி வெளியேற்றப்பட்டனர், தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,52,507 ஆக உள்ளது. தஞ்சாவூர், சேலம், ஈரோடு மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 1,000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் 2,132 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் மற்றும் சென்னையில் 2002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

27 இறப்புகளில் (6 தனியார் மருத்துவமனைகளில் மற்றும் 21 அரசு மருத்துவமனைகளில்), மூன்று நபர்களுக்கு எந்த நோய்த்தொற்றுகளும் இல்லை, அதே நேரத்தில் 24 பேர் தொற்றுநோயால் இறந்தனர். இதுவரை, 34,788 பேர் தொற்றுநோயால் இறந்துள்ளனர்.

இறந்தவர்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 31 வயது பெண்மணி ஒருவர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2 ம் தேதி ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆகஸ்ட் 12 அன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ஆகஸ்ட் 24 அன்று கோவிட் -19 மற்றும் நிமோனியாவால் இறந்தார்.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த 36 வயதான ஒருவர், ஏப்ரல் 29 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு, வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று நாட்கள் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்றபிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவர் மே 9 அன்று COVID-19 மற்றும் நிமோனியாவால் இறந்தார்.

இதுவரை, 4,04,78,188 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இன்றுவரை மாநிலத்திற்கு வந்த 50,90,402 பயணிகளில், 8,672 பேர் நேர்மறை சோதனை செய்துள்ளனர். புதன்கிழமை, மாநிலத்தில் 3,71,804 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 18-44 வயதினரைச் சேர்ந்த 2,30,858 நபர்களும், 45-59 வயதுக்குட்பட்ட 1,03,879 நபர்களும் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மொத்தம் 34,784 மூத்த குடிமக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.

இதுவரை, 4,19,692 கோவிஷீல்டு மற்றும் 72,101 கோவாக்சின் போடுவதற்கான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்றுவரை, 2,75,66,581 மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பூசி யார் போடலாம் யார் போடக்கூடாது-தகவல்

English Summary: 1,573 new infections reported in Tamil Nadu
Published on: 26 August 2021, 02:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now