News

Friday, 05 May 2023 02:53 PM , by: R. Balakrishnan

Ooty Tour

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பேருந்துகள் மூலம் உதகையில் உள்ள முக்கியமான 5 சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்கலாம். கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்க்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நகரில் கடுமையான வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், முக்கியமான சுற்றுலாத் தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று மகிழும் விதமாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

100 ரூபாய் கட்டணம்

சுற்றுலா பேருந்துகளானது, மத்திய பேருந்து நிலையம், தண்டர் வேர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ஸ் மார்க் டீ மியூசிக், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறது. இந்தப் பேருந்தில் ஒருமுறை டிக்கெட் கட்டணமாக பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறியவர்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

இந்த பயணச் சீட்டை வைத்து நாள் முழுவதும் ஒவ்வொரு சுற்றுலாத் தளங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் மற்றொரு பேருந்து ஏறி அடுத்த சுற்றுலாத் தளத்தை பார்த்து மகிழலாம்.

தொட்டபெட்டா மற்றும் ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை காண்பதற்கு அங்கு செல்லக் கூடிய பாதையானது மிகவும் குறுகலான பாதையாக இருப்பதால், இந்த இரண்டு சுற்றுலாத் தளங்களுக்கு மட்டும் சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சுற்றுலாப் பேருந்துகள் தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க

இனி வாட்ஸ்அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம்: மாநில அரசின் அருமையான முயற்சி!

ஜூலை 1 முதல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது: திடீர் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)