அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 April, 2023 12:18 PM IST
1000 crores investment in Tamil Nadu is a Taiwanese company's footwear factory

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து ரூ.1000 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு நில ஒதுக்கீட்டு ஆணையை தொழில் நிறுவனத்திற்கு வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழ்நாடு மாநிலமானது பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருவதுடன் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்தும் வகையிலும், தமிழகத்தில் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாட்டின் இல்லக்கினை அடையும் வகையிலும் இந்த அரசு முன்னெடுப்புகளை எடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்த நிலையில் அதற்கான முயற்சியில் தீவிரமாகவும் இயங்கி வருகிறது.

இதனிடையே தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்தாண்டு (07.04.2022) அன்று தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டதை தொடர்ந்து ஏப்ரல் 3 ஆம் தேதி (03.04.2023) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டி.ஒய்.சங்க் (T.Y. Chang) அவர்களிடம் கையகப்படுத்தப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இதற்காக 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள்நாட்டு பயன்பாட்டிற்காகவும் இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் நிலை 1-ல் கொள்கை அளவில் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இத்தொழிற்சாலை அமைவதன் மூலம் சுமார் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பணி வாய்ப்பின் மூலம் 17,350 பேர் நேரடியாகவும் மற்றும் 2,650 பேர் மறைமுகமாகவும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, இ.ஆ.ப, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண்க:

உள்ளங்கை மஞ்சளா இருக்கு, பாதம் வேற வலிக்குதே.. ஒருவேளை இருக்குமோ?

English Summary: 1000 crores investment in Tamil Nadu is a Taiwanese company's footwear factory
Published on: 05 April 2023, 12:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now