News

Wednesday, 21 September 2022 06:03 PM , by: T. Vigneshwaran

12 Sri Lankan Refuges Arrived Chennai

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை தொடர்ந்துவருகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக 12 பேர் தனுஷ்கோடி மணல் தீடையில் தஞ்சமடைந்தனர். அவர்களை மீட்டு கடலோர காவல் குழுமம் போலீசார் விசாரணை செய்து பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அந்நாட்டு மக்கள் வாழ வழியின்றி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே பொருளாதாரப் பிரச்னை காரணமாக இலங்கையிலிருந்து 150 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இலங்கையில் இருந்து ஆறு சிறுவர்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

அதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து போலீசாரின் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:

பயணிகளுக்கு செப்டம்பர் 25 வரை விமானத்தில் இலவச பயணம்-ஏன்?

விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் முதல்வர், காரணம் என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)