News

Friday, 09 December 2022 02:19 AM , by: Elavarse Sivakumar

குடும்ப அட்டை பயனாளிகளுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச ரேஷன்

அரசு சார்பில் குடும்ப அட்டை வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. பணவீக்க உயர்வால் சிரமப்படும் மக்கள் அரசின் இத்திட்டத்தின் மூலம் பெரும் பலன்களைப் பெறுகின்றனர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரேஷன் விநியோகம் செய்யப்படுகிறது.

150 கிலோ அரிசி

சஸ்தீஸ்கர் மாநில அரசு தனது ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முன்பை விட இப்போது ரேஷன் கார்டு மூலம் அதிக ரேஷன் கிடைக்கும். இப்போது இந்த திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 135 முதல் 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் விஷயத்தில் அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது.

நிபந்தனைகள்

35 கிலோ இலவச அரிசி பெற்று வந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனி 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதே நேரத்தில், சில அட்டைதாரர்களுக்கு 150 கிலோ வரை இலவச அரிசி கிடைக்கும். ஆனால், இதற்கு சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது.

சத்தீஸ்கரின் பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்காக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் சத்தீஸ்கரில் வசிப்பவராக இருக்க வேண்டும். இதன் கீழ், 45 கிலோ முதல் 135 கிலோ வரையிலான அரிசி முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். இது தவிர, மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களுக்கு 15 கிலோ முதல் 150 கிலோ வரை அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளது.

50 கிலோ

மாநில அரசுக்கு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அதாவது ஒரே நேரத்தில் இரண்டு மாதங்களுக்கு அரிசி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 முதல் 50 கிலோ அரிசியை மாநில அரசு வழங்கவுள்ளது.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)