1. விவசாய தகவல்கள்

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, அரசு சார்பில் 80,000 ரூபாய் பின்னேறபு மானியமாக வழங்கப்படுகிறது. இதனைப் பெற்று பயனடையுமாறு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

பந்தல் சாகுபடி

பீா்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய் போன்ற கொடிக் காய்கறிகளை பந்தல் அமைத்து சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். மேலும் காய் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இவை பொதுவாக பந்தல் காய்கறிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மானியம்

நிதிப் பற்றாக்குறை காரணமாக பல விவசாயிகள் பந்தல் சாகுபடி முறைக்கு மாறுவதில் சிரமம் உள்ளது. விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தோட்டக்கலை சாா்பில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

பின்னேற்பு மானியம்

இது குறித்து கோவை மாவட்டம் பொங்கலுாா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஷா்மிளா கூறியதாவது: பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு

இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், எஃப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.  மேலும், விவரங்களுக்கு 7708330870, 9095628657, 89392 63412 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தாா்.

மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

English Summary: Rs.80,000 Subsidy for Vegetable Cultivation- Contact Phone Numbers! Published on: 24 November 2022, 08:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.