மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 March, 2022 11:57 AM IST
Chennai Mayor and Deputy Mayor

மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வார்டு 74-ஐச் சேர்ந்த 28 வயதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கவுன்சிலர் ஆர்.பிரியா வெள்ளிக்கிழமை (04-02-2022) சென்னை மேயராக பதவியேற்க உள்ளார். மேயர், துணை மேயர் பட்டியலை திமுக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேயர் பதவிக்கான தேர்தலில் செல்வி பிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரின் தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் எம்.மகேஷ்குமார் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயராக பதவியேற்க உள்ளார். இந்த முறை சென்னை மேயர் பதவி தலித் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள 61 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரேட்டர் சென்னை மாநகராட்சி கவுன்சிலில் திமுக பெரும்பான்மையாக உள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் 153 கவுன்சிலர்களுடன் திமுக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான அதிமுகவிடம் 15 கவுன்சிலர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. காங்கிரசுக்கு 13 கவுன்சிலர்கள், சுயேச்சைகள் 5, சிபிஐ(எம்) 4, விசிகே 4, மதிமுக 2, சிபிஐ 1, பாஜக 1, அமமுக 1, தமுமுக 1 என கவுன்சிலர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய செல்வி பிரியா, முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு முன்மாதிரி ஆவார். “எங்கள் தலைவர் ஒரு தலித் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளார். சாலைகளை மேம்படுத்துவதே எனது முன்னுரிமையாகும். பல பகுதிகளில் மோசமான சாலைகள் உள்ளன. மழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுகின்றன. எனவே, எங்களுக்கு சிறந்த மழைநீர் வடிகால் தேவை. சுத்தத்திலும் கவனம் செலுத்துவேன். நான் வட சென்னையைச் சேர்ந்தவள், அங்கு சுத்தம் என்பது இருப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகும். அப்பகுதியில் சுத்தத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். முடிவெடுக்கும் முன் எங்கள் தலைவரிடம் ஆலோசனை பெறுவேன். பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என, நகரின் வடக்கு பகுதியில்  இருக்கும் மங்களபுரத்தில் வசித்து வரும் மேயர் பிரியா கூறினார்.

இவர் திமுக முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் உறவினர். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேயர் மற்றும் துணை மேயர் பதவியேற்பு விழாவை வியாழக்கிழமை அன்று ரிப்பன் கட்டிடத்தில், அதிகாரிகள் முன்னிலையில், மலர்களால் அலாங்கரிக்கப்பட்ட ஏற்பாடுகளுடன் நடைபெற்றது. மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பெட்டி மற்றும் வாக்குப்பெட்டி பாரம்பரிய கட்டிடத்தில் உள்ள கவுன்சில் மண்டபத்தில் வியாழக்கிழமை வைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெரும்பான்மை உள்ளதால், மேயர் மற்றும் துணை மேயர் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மேயர், துணை மேயர் மற்றும் நகரின் 200 கவுன்சிலர்கள், நகரத்தில் உள்ள மக்களுக்கான பிரதிநிதிகளாக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான அங்கமாக உள்ளனர்“என குறிப்பிட்டார். மேலும், இது வரவேற்கத்தக்க நடவடிக்கை, நகரின் சிறந்த நிர்வாகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தீவிர ஈடுபாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று திரு.பேடி கூறினார். வார்டு 74ல் அதிமுக வேட்பாளர் திவ்யா, உள்ளாட்சித் தேர்தலில் செல்வி பிரியாவிடம் தோல்வியடைந்தார். திருமதி திவ்யா, இப்பகுதியில் குடிமை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என குடியிருப்பாளர்கள் விரும்புகின்றனர்" எனவும், வார்டில் வசிக்கும் பலருக்கு குடிநீர் வினியோகம் இல்லை எனவும், வடிகால் அமைப்பும் மோசமாக உள்ளது,” எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

தி.மு.க.அப்பா, பிஜேபி மகன், சுயேட்சை மருமகள் - அடிச்சுத் தாக்கும் தேர்தல் காமெடி!

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக வெற்றி நிலவரம்

English Summary: 28-year-old woman set to become new Chennai Mayor
Published on: 04 March 2022, 11:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now