News

Wednesday, 23 February 2022 11:35 AM , by: Elavarse Sivakumar

வாரம் முழுவதும் ஓடி உழைக்கும் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது இறைவன் கொடுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.
அதாவது 6 நாள் வேலை, ஒரு நாள் விடுமுறை என்பதுதான் நீண்டகால நடைமுறை. இதனை மாற்றி, வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளித்து, பணியாளர்களை உற்சாகப்படுத்தியப் பெருமை ஐடி நிறுவனங்களையேச் சேரும்.

இதற்காக அவர்கள் தினமும் 9 மணி நேரம் பணி செய்கிறார்கள் என்பது நம்மில் சிலருக்குத் தெரியாது. இந்நிலையில், உலக நாடுகள் 8க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது பணிக்கு செல்லும் மக்களின் பழுவைக் குறைக்கும் வகையில், வாரத்தில் 7 நாட்களில் 3 நாட்கள் விடுமுறை கொடுத்து 4 நாட்கள் வேலை என்ற நடைமுறையைக் கொண்டுவந்துள்ளனர்.

3 நாள் லீவு

கடந்த ஆண்டு 2021ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாரத்தில் 4.5 நாள் மட்டும் வேலை என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதோடு, ஊழியர்கள் வெள்ளிக்கிழமை விருப்ப நேரத்தில் வேலை செய்யவும், வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டது. அதேபோல், ஜப்பானும் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் 4 நாட்கள் வேலை என்ற நடைமுறையில் வேலை திறன் 40 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

4 நாள் வேலை

மேலும், நியூசிலாந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதனை நடைமுறைப்படுத்தியது. அதில் திட்டம் 6 வாரம் பரிசோதனையில் ஊழியர்களின் வேலைத்திறன் 20 சதவீதமாக அதிகரித்தது. ஐஸ்லாந்தில், 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டில் பல நிறுவனங்கள் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பரிசோதனை செய்தது. இதில் சிறப்பான வளர்ச்சி கண்ட நிலையில் வாரத்திற்கு 4 நாள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளன.


இதைத் தொடர்ந்து பின்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளோடு சேர்த்து உலகில் சுமார் 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வாரத்திற்கு 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை நடைமுறையைக் கொண்டுவந்துள்ளன. எனவே இந்தியாவிலும் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என வேலைக்குச் செல்வோர் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க...

அடடா வேர்க்கடலையில் இத்தனைப் பக்க விளைவுகளா?

இதுக்குகூடவாக் கல்யாணம் நிறுத்துவாங்க? அடக் கொடுமையே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)