News

Thursday, 04 March 2021 12:04 PM , by: Elavarse Sivakumar

Credit : Top Tamil News

ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக நீலகிரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் (Assembly Election)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதிநடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Code of Conduct Violation) அமலில் உள்ளன.

தேர்தல் நடத்தை விதி (Code of Conduct Violation)

இதன்படி பொது மக்களுக்குப் பணம், பரிசு பொருள்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கக் கூடாது என்பதும் முக்கிய விதி.

ஆனால் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே,நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய ஆளுங்கட்சியினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு பரிசுப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

கோழிக்குஞ்சுகள் பறிமுதல் (Seizure of chickens)

இந்த நிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலையில்லா கோழிக்குஞ்சுகளை வீடு வீடாக வழங்கி வந்துள்ளனர்.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்து பண்ணைகளுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர், ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே தற்போது கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன. தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம். இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் படிக்க...

Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !

இயற்கை விவசாயம் செய்ய மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!

சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)