News

Friday, 11 December 2020 12:23 PM , by: Daisy Rose Mary

மனிதர்களுக்கும் விளக்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 6 பூச்சிக்கொள்ளி மருந்துகளுக்கு வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

மனிதர்களுக்கும் விளக்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 66 பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்த 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசு அமைத்த குழு18 மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்திருந்தது. 

அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!

இதில் 12 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி உடனடி தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் 6 பூச்சி கொல்லி மருந்துகள் 2020 டிசம்பர் முதல் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்த்து. அதன் அடிப்படையில், மேலும் 6 பூச்சி கொல்லி மருந்துகள் பயன்பாடுக்கு வரும் டிசம்பர் 31 வரை தடை விதிக்கப்படுகிறது. 

ஆகஸட் மாதம் தடை செய்யப்பட்ட மருந்துகள்

பெனோமில், கார்பரில், டியாஜினோன், பெனாரிமோல், பென்தியோன், லினுரோன், மெதோக்சி, எதில் மெர்குரி குளோரைடு, மெதில் பராதியோன், சோடியம் சியானிட், தியோமெடோன், திரிமோர்ப், அலக்ளோர், திகுளோர்வோஸ்,போரேட், பாஸ்பாமிதோன், திரியஜோபோஸ், திரிகுளோர்போன்.

2020ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகள் -விண்ணப்பிக்க அழைப்பு!

வரும் 31ம் தேதி முதல் தடை செய்யப்படும் மருந்துகள்

  • அலக்ளோர் - Alachlor

  • டிக்ளோர்வோஸ் - Dichlorvos

  • போரேட் - Phorate

  • பாஸ்பாமிடன் - Phosphamidon

  • ட்ரையசோபோஸ் - Triazophos

  • ட்ரைக்ளோர்போன் - Trichlorfon

வாடல் நோயைத் தீர்க்கும் திறன் நுண்ணுயிரி - தயாரிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)