News

Saturday, 11 September 2021 07:53 AM , by: R. Balakrishnan

8 hours work for police

தமிழக போலீசாரின் குறைகளை களைய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்கப்பட வேண்டும், போலீசாருக்கு 8 மணி நேர பணி முறையை விரைவில் பின்பற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

8 மணி நேர வேலை

போலீசார் பணிச்சுமை தொடர்பாக மாசிலாமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் (ஓய்வு) ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு;

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போலீசார் , மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி மகத்தானது. இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது.

3 மாதத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த குழுவில் மன நல நிபுணர்கள், உளவியலாளர் , சமூக ஆர்வலர், போலீசார், வழக்கறிஞர் இடம்பெற வேண்டும்.

போலீசாருக்கு 8 மணி நேர வேலை முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

3 ஷிப்டுகளில் போலீசாரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

கூடுதல் ஊதியம்

  • போலீசாருக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கிட அரசு பரிசீலிக்க வேண்டும்.
  • போலீஸ் துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்,
    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க

மதுரையில் மழைப்பொழிவு குறையும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை பசுமை பரப்பை அதிகரிக்க 800 இடங்கள் தேர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)