News

Thursday, 25 August 2022 05:50 PM , by: T. Vigneshwaran

A Farmer Who Single-Handedly Planted 1,500 Saplings

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவர் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஐயனார் கோவில் மற்றும் அரசு நீர்நிலைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனி நபராக பலவகையான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறார்.

ஏறத்தாழ 5 ஆண்டுகளாக இந்த மரக்கன்றுகளை நட்டு அவற்றை பாதுகாத்து பராமரித்து வரும் ரமேஷ், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நடுமாறு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலரையும் ஊக்குவித்துள்ளார். ஐயனார் கோவில் பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்ய சொல்லி அவற்றையும் அவரே பராமரித்து வளர்த்து வருகிறார்.

விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் ரமேஷ், தனது விவசாயப் பணிக்கான நேரம் தவிர்த்து காலையில் மூன்று மணி நேரம் மாலையில் மூன்று மணிநேரம் என ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்தை மரக்கன்றுகளை நடவு செய்யவும், அவற்றை பராமரிக்கவுமே செலவிடுகிறார்.

தனி ஒருவனாக செயல்பட்டு வந்த தனக்கு தற்போது ஒரு ஆண்டாக தனது தொடக்கல்வி பயிலும் இரு மகன்களும் உதவிக்கு வருவதாகத் தெரிவிக்கிறார். இவர் நடவு செய்த மரக்கன்றுகளில் 1,500 கன்றுகள் ஆள் உயரத்தை தாண்டி செழுமையாக வளர்ந்து நிற்கின்றன.

5,000 மரக்கன்றுகளை நடவு செய்து கொத்தமங்கலம் ஐயனார் கோவில் பகுதியில் ஒரு குறுங்காட்டை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள் என தெரிவிக்கிறார் ரமேஷ்.

மரங்கள் நடவு செய்தலையும் தாண்டி, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி பல தரப்பு மக்களையும் மரம் வளர்க்க ஊக்குவித்தும் வருகிறார் ரமேஷ்.

மேலும் படிக்க:

மாற்றுத்திறனாளி மாணவருக்கு மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் வருமானத்துடன் வேலை!

ஓய்வுபெற்ற தொழிலார்கள் மற்றும் துணைவியருக்கு இலவச பயண அட்டை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)