மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 May, 2022 3:19 PM IST

டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை நெல் அல்லது குறுகிய கால நெல் ரகங்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு சம்பா பயிரிடுவதற்குத் தயாராகலாம். ஏனெனில், மேட்டூர் அணையில் இருந்து மே 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக மே 24ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 21ஆம் தேதி சனிக்கிழமை உத்தரவிட்டார்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்துக் குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 115 அடியாக உள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அணையின் நீர்மட்டம் விரைவில் அதன் அதிகபட்ச கொள்ளளவை (120 அடி) தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, ஜூன், 12ம் தேதிக்கு பதிலாக, மே, 24ல் அணை திறக்கப்படும். சுதந்திரத்திற்கு பின், அணையின் வரலாற்றில், மே மாதத்தில், தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, டெல்டா பகுதி விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை நெல் அல்லது குறுகிய கால நெல் ரகங்களைப் பயிரிட்டு, சம்பா பருவத்திற்குத் தயாராகலாம் எனக் கூறப்படுகிறது. கால்வாய்களில் தூர்வாரும் பணி விரைவில் முடிக்கப்பட்டு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிற பகுதிகளுக்கு வந்து சேரும் என அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜூன் 12 ஆம் தேதிக்கு பதிலாக அணையின் ஷட்டர்களை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 115 அடியைத் தொட்டதாகவும், தற்போதைய நீர்வரத்து தொடர்ந்தால். இரண்டு நாட்களில் நீர்மட்டம் முழு கொள்ளளவை (120 அடி) தொடும்.

குறுகிய காலப் பயிருக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அரசு அணைக் கதவணைகளை முன்கூட்டியே திறக்க வேண்டும், ஜூன் 12 வரை காத்திருக்க வேண்டாம். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் தேதியைத் தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்து இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கூறினார். விவசாயிகளுக்கான விதைகள், உரங்கள் மற்றும் இதர உள்ளீடுகள் சார்ந்தும் அரசு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர் இன்னும் இரண்டு நாட்களில் திறக்கப்பட உள்ளது இந்த செய்து டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

மேலும் படிக்க

ரயில்வே அமைச்சகம்: ரூ 8.34 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

விவசாயத்திற்கு 5 லட்சம் கடன் பெறலாம்! விவரம் உள்ளே!

English Summary: A Happy news for Delta Farmers!
Published on: 22 May 2022, 10:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now