News

Thursday, 11 May 2023 04:08 PM , by: Poonguzhali R

A wave of tourists! Flower fair extended for one more week!

தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் ஆகியன இணைந்து நடத்திவருகின்ற தேக்கடி 15வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1-ந்தேதி தொடங்கி சிறப்புற நடந்து வருகிறது.

இம்மலர் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள், அலங்கார செடிகள், சமையலறைத் தோட்டம் அமைக்க தேவையான செடிகள், நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களைக் கவருகின்ற வகையில் அழகாக வண்ணமயமாக இடம் பெற்றுள்ளது.

தற்பொழுது தமிழகம்-கேரள மாநிலம் பகுதிகளில் கோடை விடுமுறை காலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

மலர் கண்காட்சி குறித்து மலர் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் குறிப்பிடுகையில், மலர் கண்காட்சி கடந்த ஏப். 1-ந் தேதி முதல் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு நடந்துவருகின்ற இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் கோடை விடுமுறையினைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம், அதாவது வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீட்டிக்கப்பட்ட ஒரு வார நாட்களில் மேலும் புதியதாகக் கருத்தரங்கம், நாடகம், முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் கூறுகிறார். கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் கிடையாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் படிக்க

அதிரடி ஆஃபரில் 50MP கேமரா உள்ள Samsung Phone!

தமிழகத்தில் வரப்போகிறது CCTV-யுடன் புதிய பேருந்து நிறுத்தங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)