நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 September, 2022 1:40 PM IST
Aavin Products are on the rise from today!

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்றுமுதல் (16/09/2022) உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவின் தயாரிப்புகளின் இனிப்புப் பொருட்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

பொதுத்துறை கூட்டுறவு நிறுவனம் ஆவின் தனது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தியுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த விலை உயர்வுக்குத் தமிழகப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசு பால் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. விதித்ததை அடுத்துக் கடந்த ஜூலை மாதத்தில் தயிர் மற்று நெய் ஆகியவற்றின் விலையினை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இன்று இனிப்புப் பொருட்களின் விலையினை உயர்த்துவதாகக் கூறியுள்ளது.

விலை உயர்வு பட்டியல்

  • 125 கிராம் குலாப் ஜாமுன்: ரூ. 45-லிருந்து ரூ. 50 ஆக உயர்வு
  • 250 கிராம் குலாப் ஜாமுன்: ரூ. 80-லிருந்து ரூ. 100 ஆக உயர்வு
  • 100 கிராம் ரசகுல்லா: ரூ. 40-லிருந்து ரூ. 45 ஆக உயர்வு
  • 200 கிராம் ரசகுல்லா: ரூ. 80-லிருந்து ரூ. 90 ஆக உயர்வு
  • 100 கிராம் பால்கோவா: ரூ. 47-லிருந்து ரூ. 55 ஆக உயர்வு
  • 250 கிராம் பால்கோவா: ரூ. 120-லிருந்து ரூ. 140 ஆக உயர்வு

மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!

இந்த விலை உயர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு விற்பனை விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ஆவின் பொருட்களும், ஆவின் பாலும் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகப் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க

இரட்டிப்பு லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை!

அடடே! அத்திப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

English Summary: Aavin Products are on the rise from today!
Published on: 16 September 2022, 01:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now