மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 April, 2021 8:03 PM IST
Credit : Daily Thandhi

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், கொடுமுடி, வெப்பிலி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.41 லட்சத்து 28 ஆயிரத்து 786-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது.

தேங்காய் ஏலம்

தேங்காய் (Coconut) 8 ஆயிரம் கொண்டு வரப்பட்டது. சிறிய தேங்காய் ஒன்று 5 ரூபாய் 21 காசுக்கும். பெரிய தேங்காய் ஒன்று 20 ரூபாய் 11 காசுக்கும் என மொத்தம் ரூ.81 ஆயிரத்து 983-க்கு ஏலம் போனது. இதேபோல் கொப்பரை தேங்காய் 47 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இது (குவிண்டால்) ரூ.10 ஆயிரத்து 689 முதல் ரூ.12 ஆயிரத்து 649 வரை என மொத்தம் ரூ.1லட்சத்து 80 ஆயிரத்து 892-க்கு விற்பனை ஆனது.

எள், ஆமணக்கு, மக்காச்சோளம்

ஆமணக்கு 12 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) ரூ.4 ஆயிரத்து 289 முதல் ரூ.4 ஆயிரத்து 661 வரை என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 342-க்கு விற்பனை ஆனது. வெள்ளை எள் 10 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) ரூ.9 ஆயிரத்து 549 முதல் ரூ.10 ஆயிரத்து 750 வரை என மொத்தம் ரூ.46 ஆயிரத்து 675-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மக்காச்சோளம் (Maize) 24 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இது (குவிண்டால்) ரூ.1,629 முதல் ரூ.1,650 வரை என மொத்தம் ரூ.29 ஆயிரத்து 592-க்கு ஏலம் போனது. அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 384-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொடுமுடியில் விற்பனை

கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் இயங்கிவரும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களான தேங்காய், கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. தேங்காய் 11ஆயிரத்து 146 கொண்டு வரப்பட்டன. இது (கிலோ) 32 ரூபாய் 65 காசு முதல் 38 ரூபாய் 65 காசு வரை என மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு விற்பனையானது
விவசாயிகள் 262 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் (கிலோ) 128 ரூபாய் 10 காசு முதல் 133 ரூபாய் 71 காசு வரையும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் (கிலோ) 94 ரூபாய் 29 காசு முதல் 132 ரூபாய் 27 காசுக வரை என மொத்தம் ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 302-க்கு கொப்பரை தேங்காய் விற்பனை ஆனது.
எள் 285 மூட்டைகள் கொண்டு் வரப்பட்டன. இது (கிலோ) 83 ரூபாய் 69 காசு முதல் 112 ரூபாய் 31 காசு வரை என மொத்தம் ரூ.21 லட்சத்து 59 ஆயிரத்து 626-க்கு ஏலம் போனது. கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.36 லட்சத்து 85 ஆயிரத்து 114-க்கு ஏலம் போனது.

வெப்பிலியில் விற்பனை

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் (Coconut) ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 593 தேங்காய்களை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக 32 ரூபாய் 34 காசுக்கும், அதிகபட்ச விலையாக 37 ரூபாய் 41 காசுக்கும் என மொத்தம் 76 ஆயிரத்து 288 ரூபாய்க்கு ஏலம் போனது.

இந்த தகவலை ஒழுங்குமுைற விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் து.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அந்தியூர், கொடுமுடி, வெப்பிலி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.41 லட்சத்து 28 ஆயிரத்து 786-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஈரோட்டில் ஏல முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் பூக்கள் விற்பனை

மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை! நிவாரணம் வழங்க கோரிக்கை!

English Summary: Agricultural products auctioned at Rs. 41 lakh in Erode regulated outlets!
Published on: 01 April 2021, 08:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now