மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 January, 2021 12:34 PM IST
Credit : Hindu

கள்ளக்குறிச்சி மற்றும் கரூரில் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் வேளாண் பண்ணை இயந்திரங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மேலும், கரூர் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் 475 வேளாண் பண்ணைக் கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வேளாண் விதை சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.

வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ், வேளாண்துறை மற்றும் தோட் டக்கலைத் துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க ரூ.5 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்படவுள்ளது. அதன் பொருட்டு இயந்திர விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் இடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் இயந்திர கண்காட்சி தொடங்கப்பட்டது.

உழவர் உற்பத்தியாளர் ஒங்கிணைப்பு கூட்டம்

இதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் சார்பில், வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடந்தது. இதனிடையே, உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திர விற்பனையாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் பேசுகையில், உழவர் உற்பத்தியாளர் குழு, வேளாண் இடுபொருட்களை கூட்டாக கொள்முதல் செய்வதால், விலை குறைவதோடு, போக்குவரத்து செலவினமும் குறைகிறது. தினசரி பண்ணை வரவு செலவு, கணக்கு பதிவேடு பராமரித்தல், கூட்டாக விளை பொருட்களை விற்பனை செய்வதால், குறைந்த சாகுபடி செலவில் நிறைந்த லாபம் ஈட்டப்படுகிறது.

 

வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்

கரூர் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக இதுவரை, 13 ஆயிரத்து, 400 சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, 670 உழவர் ஆர்வலர் குழுக்களும், 134 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை வாயிலாக, 98 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, 475 வேளாண்கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு, ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு இதுவரை, 60.45 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என டி.ஆர்.ஓ ராஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க..

தமிழக கால்நடைத்துறை திட்டங்களுக்கு ரூ.1,464 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!

வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!

English Summary: Agriculture Equipment Purchase by FPO Groups at the exhibition held at karur and kallakurichi district
Published on: 24 January 2021, 12:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now