News

Thursday, 29 June 2023 11:30 AM , by: Poonguzhali R

Amaravati Dam opening! Warning to Tirupur, Karur farmers!!

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப்பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு அகராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 1160 கன அடி வீதம் 1002.24 மி.க அடிக்கு மீகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணைப்பிறப்பித்து உள்ளது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 380.16 மி.க. அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறக்க ஆணை வந்துள்ளது. ஆக மொத்தம் 1382.40 மி.கன அடிக்கு மிகாமல் திறக்க ஆணை வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க: பாரம்பரிய விவசாயத்திற்கு மானியம்|மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்! 

இந்த பாசன நீரானது இன்று முதல் வருகின்ற ஜூலை 09 வரை (29/06.2023 முதல் 09.07.2023) எனப் பத்து நாட்களுக்குப் பயிர்களைக் காக்கும் பொருட்டும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்குக் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் பொருட்டும் திறக்கப்பட இருக்கிறது. எனவே விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!

இத்தகைய நீர் திறப்பால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய பாசனப் பகுதிகளிலுள்ள 21867 ஏக்கர் நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் புதிய பாசனப் பகுதிகளில் உள்ள 25250 ஏக்கர் நிலங்களும் என மொத்தமாக 47.117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தீப்பிடிக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி! முதலிடத்தில் தமிழகம்!!

PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)