மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2023 4:00 PM IST
Anbil Mahesh will announce the results of class 12th exam on 8th May

12ஆம் வகுப்பு மாநில வாரியத் தேர்வு முடிவுகளை மே 8ஆம் தேதி அன்பில் மகேஷ் அறிவிக்கிறார். தேர்வு முடிவுகளை மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று தெரிந்துகொள்ள கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

12ஆம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் வெளியிடப்படும் என அதிகாரப் பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

www.tnresults.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளைப் பார்க்கலாம். மாணவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையங்களில் அல்லது என்ஐசி கிளை அலுவலகங்களிலும் முடிவுகளைப் பார்க்கலாம். தேர்வு முடிவுகளை எந்த பொது நூலகத்திலும் இலவசமாகப் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று தெரிந்துகொள்ளவும் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு முடிவுகள் SMS ஆக அனுப்பப்படும்.

முன்னதாக, தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் மே 7 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நீட் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக முடிவுகளை அறிவிப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்கும் என்று ஆசிரியர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கவலை தெரிவித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க

காரைக்காலில் முதல் முறையாக 2 ஏக்கரில் தினை சாகுபடி!

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம்! வறட்சியில் அல்லிகுளம் கிராமம்!!

English Summary: Anbil Mahesh will announce the results of class 12th exam on 8th May
Published on: 27 April 2023, 03:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now