நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 August, 2022 5:29 PM IST
Announcement of free travel card for government employees and their spouses!

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும், அவர்களது துணைவியர்களுக்கும் இலவசப் பயண அட்டை வழங்கப்படும் எனத் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என அரசுக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு சலுகைகள் அளிக்கும் சூழலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசு இலவசப் பயண அட்டை வழங்கிட வேண்டும் என ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இன்று இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை வைத்த நிலையில் இவ்வறிவிப்பினை தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அதோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக் குரோம்பேட்டை, மாநகர் போக்குவர்த்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சுமார் 7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.

இந்நிலையில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூ. 2,012 என்றும், அதிகபட்சமாக ரூ. 7981 என்றும் நிர்ணயிக்கப்பட்டுக் கையெழுத்தானது. நடத்துனருக்கு குறைந்தபட்சம் ரூ. 1965 எனவும், அதிகபட்சமாக ரூ. 6640 எனவும் உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் படிக்க

கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

தமிழகத்தில் 37,450 வேலைவாய்ப்புகள்: அரசு ஒப்பந்தம்!

English Summary: Announcement of free travel card for government employees and their spouses!
Published on: 24 August 2022, 05:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now