News

Monday, 16 May 2022 11:26 AM , by: Elavarse Sivakumar

தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே ஒரு முறைக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது.

2022-23-ஆம் கல்வி ஆண்டில் மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி முதல் நடைபெற்று வருகிறது.

நீட்டிப்பு (Extension)

தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே 20 வரை (Until May 20)

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டிந்த காலக்கெடு, மே6ம் தேதியில் இருந்து ஏற்கனவே, மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)