News

Thursday, 28 April 2022 04:42 PM , by: T. Vigneshwaran

Fertilisers

மண்ணின் ஊட்டச்சத்தை விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, டிஏபி உள்ளிட்ட பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (பி&கே) உரங்களுக்கு ரூ.60,939.23 கோடி மானியம் வழங்க அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

காரீஃப் பருவத்திற்கான (ஏப்ரல் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (NBS) விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், கடந்த நிதியாண்டு முழுவதும் இந்த சத்துக்களுக்கு சுமார் ரூ.57,150 கோடி மானியம் அளிக்கப்பட்ட நிலையில், காரீஃப் பருவத்திற்கான பி&கே உரங்களுக்கு ரூ.60,939 கோடி மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

டிஏபி (டி-அம்மோனியம் பாஸ்பேட்) மானியம் ஒரு மூட்டைக்கு ரூ.2,501 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளுக்கு டிஏபி ஒரு மூடைக்கு ரூ.1,350-க்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

2020-21 ஆம் ஆண்டில் ஒரு மூட்டைக்கு 512 ஆக இருந்த டிஏபிக்கான மானியம் 2,501 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் தாக்கூர்.

உலக சந்தையில் உரங்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ள போதிலும், விவசாயிகளுக்கு சுமை அதிகரிக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (என்பிஎஸ்) திட்டம் ஏப்ரல் 2010 முதல் செயல்படுத்தப்படுகிறது.

NBS கொள்கையின் கீழ், நைட்ரஜன் (N), பாஸ்பேட் (P), பொட்டாஷ் (K) மற்றும் சல்பர் (S) போன்ற ஊட்டச்சத்துக்களுக்கு மானியத்தின் நிலையான விகிதம் (ஒரு கிலோ அடிப்படையில்) ஆண்டு அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது.

N, P, K, மற்றும் S சத்துக்கள் மீதான ஒரு கிலோ மானிய விகிதங்கள் NBS கொள்கையின் கீழ் உள்ள பல்வேறு P&K உரங்களில் ஒரு டன் மானியமாக மாற்றப்படுகிறது.

உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் 24 வகை பி&கே உரங்கள் போன்ற உரங்களை அரசாங்கம் வழங்குகிறது.

மேலும் படிக்க

காளான் வளர்ப்பு: மே-ஜூன் மாதங்களுக்கு ஏற்ற வகை, லாபம் அதிகம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)