News

Wednesday, 17 August 2022 11:58 AM , by: Poonguzhali R

Automatic ticketing will soon be introduced in government buses

அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறையானது விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பேருந்துகளுக்கும் படிப்படியாக வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்பொழுது விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்துள்ள அனைத்து பயணிகளுக்கும் காகிதப் பயணச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் அரசு பேருந்துஅலில் தானியங்கி முறையில் பயணச் சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாகச் சென்னை, மதுரை, கோவை ஆகிய போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடைமுறைக்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளி போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த தானியங்கி பயணச் சீட்டு முறையினை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயண்ச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

அரசு மானியங்களுக்கு இது கட்டாயம்: அரசு அறிவிப்பு!!

விவசாயிகளுக்கு குவியும் மானியங்கள்! இன்றே விண்ணப்பியுங்க!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)