News

Wednesday, 04 May 2022 03:04 PM , by: Poonguzhali R

Ban on 'Pattina Pravesam' of Adheenam: Voices of Protest Rising!

பல நூற்றாண்டுகளாக, முடி சூடிய தர்மபுர ஆதனத்தின் தலைவரை பல்லக்கில் ஏற்றிச் செல்லும் வழிபாட்டு முறையைத் தடை செய்த வருவாய்க் கோட்ட அதிகாரியின் முடிவால் மயிலாடுதுறை வட்டாரப் பகுதியில் பெரும் புயல் வீசுகிறது.

சமீபத்தில், மயிலாடுதுறை மாவட்டம், தர்மபுரம் ஆதீனத்தின் 'பட்டின பிரவேசம்' என்ற சடங்கு பகுத்தறிவாளர்களிடையே பலத்த எதிர்ப்பைத் தூண்டியது. அதாவது, மனித உரிமை மீறல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் காரணம் காட்டி மயிலாடுதுறைப் பகுதியின் ஆர்.டி.ஓ, இந்த பல்லக்கு நிகழ்வை நிறுத்த உத்தரவு கோரின.

மயிலாடுதுறை ஆர். டி. ஓ. ஜே. பாலாஜி ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் பார்ப்பனரை பல்லக்கில் ஏற்றாமல் சடங்கு நடத்துவதற்கு, எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மே 22ஆம் தேதி நடைபெறும் 'பட்டினப் பிரவேசத்தில்' 27வது சீடர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்பது குறித்த அறிவிப்பை அடுத்து, இந்த உத்தரவு வந்துள்ளது. தடையை ரத்து செய்யக் கோரி ஆதீனத்தைப் பின்பற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்செயலாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சமீபத்தில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் மாநிலத்தில் உள்ள ஆதீனங்கள் முழுவதும் எதிரொலித்த நிலையில், மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், தர்மபுரம் ஆதீனத்தின் பாதுகாப்பிற்காக, இந்த சடங்கு நடைபெறுவதை உறுதி செய்யக்கோரி தானாக முன்வந்து உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். "அனுமதி மறுக்கப்பட்டால், நானே பல்லக்கை எடுத்துச் செல்வேன்," என்றும் அவர் கூறினார். பொதுவாக, இந்த சடங்கு குறைந்தது ஐந்து நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

”ஆதின ஆதரவாளர்கள் தாமாக முன்வந்து குருவை தோளில் சுமந்து செல்லும் சடங்கு இது” என்று கூறிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு நிகழ்வு நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதோடு, முதல்வர் பதவியேற்பு விழாவின் போது நடைபெறும் சடங்கை ஒப்பிட்டுப் பேசிய மதுரை ஆதீனம், “அப்படியானால் அந்த வழக்கத்தையும் தடை செய்ய வேண்டும்” என்றார். இத்தகைய மதச் சடங்குகளை எதிர்க்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களையும் வலியுறுத்தினார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாக மடத்தின் ஊழியர்கள் கூறுகின்றனர். பல்லக்கு சுமக்கும் மக்கள், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், இந்த சேவையை இறைவனுக்குச் செய்வதாக அவர்கள் கருதுகின்றனர் என்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றன.

திராவிடர் கழகத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கே.தளபதிராஜ், இது குறித்துக் கூறுகையில் “சக மனிதனை பல்லக்கில் ஏற்றிச் செல்லும் நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மனித உரிமை மீறல் ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் பட்டினப் பிரவேஷம் நடைபெறுமா? இல்லையா? என்பது மயிலாடுதுறை வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

கீழடி அகழ்வாராய்ச்சி: பெண்ணின் தலை கண்டுபிடிப்பு!

கல்விக் கொள்கை: தமிழகத்திற்கு ஒரு சோதனையாக மாறியுள்ளது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)