News

Saturday, 27 August 2022 02:13 PM , by: Elavarse Sivakumar

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கானப் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பானத் தகவலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள்

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

4 கட்டங்களாக

இது குறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு செப்.10 முதல் நவ.13 வரை 4 கட்டங்களாக நடைபெறும்.செப். 10-12 முதற்கட்டமும், செப்.25-27 இரண்டாம் கட்டமும், அக்.13-15 3ம் கட்டமும், அக்.29-31 வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல் பி.இ., படிப்புகளில் தமிழ் பாடம் மற்றும் புதிய பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்.

முதல்வர் வேண்டுகோள்

மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் படிப்பில் கவனம் செலுத்த முதல்வர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.அதே ஏற்றுக்கொண்டு அனைத்து மாணவர்களும் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)