News

Saturday, 07 November 2020 07:30 PM

Credit : HIndu Tamil

இந்தியாவில், நீர்மேலாண்மையை (Water Management) சிறப்பாக மேற்கொண்ட மாநிலங்களுக்கான விருதுப்பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

சிறந்த மாவட்டங்கள்:

ஆறுகளை உயிர்பிக்க செய்த சிறந்த மாவட்டங்களுக்கான பட்டியலில் வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடம்பிடித்துள்ளன. நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வாகியுள்ளது. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி (Madurai Corporation) 2வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, மதுரை மாநகராட்சி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நீர் நிலை பாதுகாவலர்கள் பட்டியலில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முதல் பரிசையும், அண்ணா பல்கலை பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.

விர்ச்சுவல் முறையில் விருது:

தடுப்பணை கட்டுதல், சொட்டு நீர் பாசன செயல்பாடு, பாசன வசதியை அதிகரித்தல், மழைநீர் சேகரிப்பு திறன், தண்ணீர் கணக்கீடு குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பரிசுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகளானது நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் விர்ச்சுவல் (Virtual) முறையில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு விருது (Award) வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பின்னலாடை தொழில் துறைக்கு, மானியத்தோடு தனி வாரியம் அமைக்க கோரிக்கை!

மூங்கில் வெட்டுவதற்கு முன் அனுமதி தேவையில்லை: நிதின் கட்கரி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)