மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 March, 2021 10:50 AM IST
Credit : The Leaflet

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று விவசாய சட்டங்களைக் (Agri Laws) கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் (Delhi) விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இரயில் மறியல், பாரத் பந்த், டிராக்டர் பேரணி (Tractor Rally) உள்பட பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர் விவசாயிகள். போராட்டம் தொடங்கி வரும் மார்ச் 26-இல் 4 மாதங்கள் முடிவடையப் போவதால், அன்றைய தினம் பாரத் பந்தை நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

மீண்டும் பாரத் பந்த்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர், வரும், 26ம் தேதி, 'பாரத் பந்த் (Bharath Banth)' நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து, விவசாய சங்க தலைவர் புடா சிங், டில்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ரயில்வே துறை தனியார் மயமாவதை எதிர்த்து, தொழிற்சங்கங்களுடன் இணைந்து, வரும் 15ல், விவசாய சங்கத்தினர் பேராட்டம் நடத்த உள்ளனர்.அடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய சங்கத்தினர் போராட்டத்தை துவங்கி, வரும், 26ம் தேதியுடன், நான்கு மாதங்கள் நிறைவடைகின்றன. அன்றைய தினம், காலை முதல் மாலை வரை, நாடு முழுவதும் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் (Tractors) நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராக இருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் நேற்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என்று இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! அதிர்ச்சி தகவல்!

கோடையில் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய பதநீர் குடியுங்கள்!

English Summary: Bharat Bandh again on March 26! Call to farmers
Published on: 11 March 2021, 10:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now