Bihar Govt says Up to 40% subsidy for setting up vermicomposting plants
பீகார் மாநிலத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்த சிறப்பு ஊக்கத் திட்டத்தைத் தொடங்க பீகார் விவசாயத் துறை முடிவு செய்துள்ளது என்று மாநில வேளாண் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பீகாரின் பல பகுதிகளில் சுமார் 40,000 விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்கிறார்கள். ரசாயனமற்ற விவசாயம் இப்போது கங்கையை ஒட்டிய 13 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது, இது 4-வது விவசாய சாலை திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் குமார் சர்வஜீத் கூறினார். புதிய விவசாய சாலை வரைபடம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் தனியார்-பொது கூட்டாண்மை அடிப்படையில் மண்புழு உரம் தயாரிக்கும் அலகுகள், உயிர்வாயு ஆலைகள் மற்றும் பயோடெக் ஆய்வகங்கள் நிறுவுவதற்கு ஊக்கத்தொகை வழங்கவும், அத்துடன் இயற்கை வேளாண்மைத் துறையில் புதுமையான தொடக்கங்களை ஊக்குவித்தலை வேளாண் துறை முன்மொழிந்துள்ளது. பசுந்தாள் உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல் உட்பட குறிப்பிட்ட இடங்களில் ஊக்குவிப்புத் திட்டத்திற்கான செலவில் 90% வரை மானியமாக வழங்குகிறது என்று ஒரு அதிகாரி கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பாட்னா, பக்சர், போஜ்பூர், சரண், வைஷாலி, சமஸ்திபூர், ககாரியா, பெகுசராய், லக்கிசராய், பாகல்பூர், முங்கர், நாளந்தா மற்றும் கதிஹார் போன்ற மாவட்டங்களில் சுமார் 40,000 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் (2019 முதல் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில்). விவசாயிகளின் அனைத்து உணவுகளும் C-2 அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
மேலும் அவர்களின் தயாரிப்புகள் இயற்கை விவசாயத்திற்கான மிக உயர்ந்த சான்றிதழான C-3 சான்றிதழுடன் விரைவில் சந்தைப்படுத்தப்படும். விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண்மைக்காக ஏக்கருக்கு ரூ.11,500 நிதியுதவியும், மேலும் இலவச உயிர் உரம் மற்றும் சான்றளிக்கப்பட்ட விதைகளை மாநில அரசிடமிருந்து பெறுகின்றனர்.
சுமார் 37,000 ஏக்கரில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுமங்கள் மூலம் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மண்புழு உரம் உற்பத்திக்கான செலவில் ரூ.5000 அல்லது 50% பங்களிக்க முடிவு செய்துள்ளது. சுமார் 19,000 மண்புழு உரம் அலகுகளை அமைக்க இத்துறை உத்தேசித்துள்ளது" என அதிகாரி மேலும் கூறினார்.
இது தவிர, குறைந்தபட்சம் 13 வணிக மண்புழு உரம் தயாரிக்கும் ஆலைகளை நிறுவுவதற்கு தனியார் தொழில்முனைவோருக்கு உதவும் வேளாண் துறையின் திட்டத்தை பீகார் மாநில அரசு அங்கீகரித்துள்ளது. இதற்காக அவர்கள் 6.40 லட்சம் மானியம் அல்லது ஒவ்வொரு யூனிட்டின் செலவில் 40% பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
ஷெனாய் நகரில் இனி கூட்டம் அள்ளும்.. புத்துயிர் பெற்ற இந்த பூங்காவினால் தான்!
எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்