சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 September, 2022 5:21 PM IST
Rahul Gandhi

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு: கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீரைவிலக்கிக் கொண்டு பாய்ந்த படகுகள்! துடுப்புப் போட்டு அசத்திய ராகுல் காந்தி, வரத்து அதிகரிப்பால் கடும் சரிவில் உள்ளது முருங்கை-யின் விலை, இந்திய விவசாயிகள் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு: கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர், மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் இயந்திரம் பெறும் வயதினை 45 லிருந்து 60 என உயர்த்தி உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு என 2022-23 ஆண்டில் ரூ. 838 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன எனவும் கூறியுள்ளார். மேலும், இந்த மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, தாம்பரம் ராஜா, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் கலந்துகோண்டனர்.

நீரைவிலக்கிக் கொண்டு பாய்ந்த படகுகள்! துடுப்புப் போட்டு அசத்திய ராகுல் காந்தி!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற படகுப் போட்டியில் துடுப்புகளை வீசி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி படகு ஓட்டியது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா என்றழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிரச்சாரப் பயணம் நடத்தி வரும் ராகுல் காந்தி தற்பொழுது கேரள மாநிலத்தில் உள்ளார். இந்நிலையில் ஆலப்புழா புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாரம்பரிய பாம்பு படகுப் போட்டியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் துடுப்புகளைப் போட்டு படகை இயக்கியது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய விவசாயிகள் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

ஹரியான கிசான் கிளப் தலைவர் விஜேந்திர சிங் தலால், விவசாயி ரமேஷ் சவுகான் மற்றும் புதுமை விவசாயி சர்தார் ஓம்பீர் சிங் ஆகியோர் கிரிஷி ஜாக்ரன் தலைமை அலுவலகத்தைப் பார்வையிட்டனர். அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகள் அனைவரும் தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் கிரிஷி ஜாக்ரன் குழுவினரிடையே பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி.டொமெனிக், இயக்குநர் ஷைனி டொமினிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

இந்திய ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

இந்திய ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் ஸ்மிட் ஷா இன்று கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை தந்தார். கிரிஷி ஜாக்ரன் நிறுவனத்தின் நோக்கங்கள், சாதனைகள், விவசாயிகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் எவ்வகையில் கிரிஷி ஜாக்ரன் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் கிரிஷி ஜாக்ரனின் 26 ஆண்டு காலச் செயல்பாடுகள் காணொளியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்மிட்ஷா தனது கருத்துக்களைக் கிரிஷி ஜாக்ரன் குழுவினரிடையே பகிர்ந்துகொண்டார். இச்சந்திப்பில் கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி.டாம்னிக், இயக்குநர் சைனி டாமினிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் ஊழியர்கள் பங்குபெற்றனர்.

மேலும் படிக்க

இந்திய ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் ஸ்மித் ஷா கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

இன்றைய வேளாண் செய்திகளும் மானியத் தகவல்களும்!

English Summary: Boats that have flown with water! Rahul Gandhi who put on a paddle and lied!
Published on: 20 September 2022, 05:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now