News

Friday, 30 October 2020 06:43 AM , by: Daisy Rose Mary

Credit : Dinamani

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டத்தில் தமிழகத்தில் 59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு (Dam Rehabilitation and Improvement Project) திட்டத்தின் 2ம் மற்றும் 3ம் கட்ட பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் சணல் சாக்குகளில் பொருட்கள் அனுப்பும் திட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்யும் திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழகத்தில் 59 அணைகள் புனரமைப்பு

இதன் மூலம் தமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு ரூ.10,211 கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2031-க்குள் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சணல் தொழில் ஊக்குவிப்பு

சணல் சாக்குகளில் பொருட்களை அனுப்புவதற்கான விதிமுறைகளை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 100 சதவீத உணவு தானியங்கள் மற்றும் 20% சர்க்கரை ஆகியவை சணல் சாக்குகளில் நிரப்பப்பட்டு அனுப்புவது கட்டாயமாக்கப்படும். இந்த முடிவு சணல் தொழிலை ஊக்குவிக்கும். நாடு முழுவதும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3.7 தொழிலாளர்கள் சணல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

 

எத்தனால் கொள்முதல்

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு கரும்பு அறுவடை காலம் மற்றும் எத்தனால் விநியோக ஆண்டு 2020-21-ல், எத்தனால் விலையை நிர்ணயம் செய்வது உட்பட எத்தனால் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எத்தனால் விலை ரகத்திற்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.62.65 வரை அதிகரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க..

தீபாவளி நற்செய்தி : ஜன் தன் வங்கி கணக்கில் மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு முடிவு!

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை, சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)