1. செய்திகள்

தீபாவளி நற்செய்தி : ஜன் தன் வங்கி கணக்கில் மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு முடிவு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

விவசாயிகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்ட பெண் பயனாளிகளுக்கு தீபாவளி போனஸாக ரூ.1500 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் என்பது மத்திய அரசின் கரிஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறது. PMJDY (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின் மூலம் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகையில் நிதி உதவி அளித்து வருகிறது. இப்போது, PMJDY பெண் பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்பு ஒரு சிறப்பு பரிசைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 1500 ரூபாயை மீண்டும் ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண் பயனாளிகளுக்கு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் சுமார் 80 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஜூன் மாதம் வரையிலான உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது, பின்ன், இது நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்னுமும் கொரோனா தொற்று முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான ஏழைகளுக்கு மீண்டும் உணவு தானியங்களை வழங்கும் வசதியை மார்ச் 2021 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த வசதியை கரிஃப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும் ஒரு கிலோ கிராம் பருப்பும் கொடுக்கப்படுகிறது.

ஜன் தன் கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்

  • (KYC) உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.

  • புலம்பெயர்ந்த அல்லது பேரிடர் காலத்தில் சிக்கி ஆவணங்களை தொலைத்தவர்கள் ஒரு சிறிய வங்கிக் கணக்கைத் திறக்கலாம். அதில், நீங்கள் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தையும் உங்கள் கையொப்பத்தையும் வங்கி அதிகாரியின் முன் நிரப்ப வேண்டும்.

  • ஜன தன் கணக்கை 10 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் திறக்கலாம். ஜன தன் கணக்கைத் தொடங்க எந்த கட்டணமும் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.



ஜன் தன் கணக்கில் கிடைக்கும் நன்மைகள்

  • இத்திட்டத்தின் கீழ், ஓவர் டிராஃப்ட் வசதியுடன் ரூபே டெபிட் கார்டும் வழங்கப்படுகிறது.

  • டெபிட் கார்டில் ரூ .1 லட்சம், விபத்து காப்பீடு இலவசமாக கிடைக்கிறது.

  • அரசு திட்டங்களின் மூலம் கிடைக்கும் மானிய நிதிகள் நேரடியாக இந்த பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • ரூ .10,000 வரையிலான ஓவர் டிராஃப்ட் வசதி ஒரு குடும்பத்திற்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு மட்டுமே கிடைக்கிறது, குறிப்பாக குடும்பத்தின் பெண் பயனாளிகளுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க....

பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு

English Summary: Central Government Decided to Transfer Rs 1500 to women Jan dhan account holders as diwali Gift Published on: 29 October 2020, 06:25 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.